நீ இல்லா வாழ்வெனக்கு

நீ இல்லா வாழ்வெனக்கு
நீரில்லா பாலை என்றாய்
நீ இன்றி
என்னுயிரும்
வாழாது என்றவளே
பூவான உன் மனசை
அடைகாத்து வைத்திருந்தும்
பூவான என் மனசை
புரிந்துகொள்ளவில்லையடி
உதவுமெந்தன் உள்ளத்தாலே
நடக்காத பெண்ணுக்கு
தான் உதவும் மனம் செய்து நின்றேன்
உதவும் எந்தன் மனதையுமே
பூக்க வைத்த பூங்குயிலே
சந்தேக கண்ணுடனே
நீ பேசும் பேச்சினிலே
உண்மையாகி போனதடி
அவள் எனக்கு
மாலையிட்ட மங்கையடி

எழுதியவர் : செல்வம் (18-Aug-17, 4:51 pm)
பார்வை : 494

மேலே