பூவுக்குள் பூவாக
பூவுக்குள் பூவாக பூத்திருக்கும்
மதுமலரே
பூகம்ப நெஞ்சினிலே
புகுந்தாட வேண்டுமடி
கண்ணுக்குள் உந்தன் முகம் சொல்லாமல் தேடிவர
விண்ணுக்குள் என் நினைவு
சிறகடித்து பறக்குதடி
நெஞ்சுக்குள் தீயாக உன்னழகு சுற்றுதடி
நெஞ்சுக்குள் மருந்தாக நீ பனிபொழிய வேண்டுமடி
வில்லான விழி கொண்டு
சொல்லாத மொழிகொண்டு
நெஞ்சுக்குள் வந்தவளே
என் உயிரோடு கலந்துவிடு