என்னவாய் நான்

என்னவாய் நான் . . .

அவள் தொடுக்கும்
பார்வைக் கணைகள்
குவிந்த என் இதயம்
ஓர் பாசறையாய் . . .

என் வாழ்நாட்கள் . . .
அவளுக்காகவே
கிழிகின்ற
நாட்காட்டியாய் . . .


நான் ஜீவிக்க
அவள் நினைவுகள் மட்டுமே
ஓர் தீனியாய் . . .

எனது செவி உணர்
அலைவரிசைகள்
அவளது
இயக்கத்தை மட்டும்
பதிவு செய்வதாய் . .

அவளை முன்விட்டு
திக்கறியாது
என்நிழலும் தொடர்வதாய் . .

அவளுக்கு பிடித்த
வண்ணங்கள் மட்டுமே
என் ஆடைக்கு
சாயமேற்றுவதாய் . .

அவள் மடிகிடந்த
புத்தகங்களே
குடிகொள்கின்றன
என் கரங்களில்
புனிதநூலாய் . . .

இப்படியாய்
அவளாய் நானிருக்க
என்னவாய் அவள் என்று
அறியாமல் . . .
அறியும் ஆவலில் . . . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (18-Aug-17, 9:07 pm)
Tanglish : ennvaai naan
பார்வை : 234

மேலே