கண்ணீர் மழை

தென்றலும் மரமும்
காதல் கொள்ள
மேகங்களுக்கு திருமணம்
மேள வாத்தியங்கள் இன்னொலி கானங்கள்
வண்ண நிறம் கோர்த்த வானவில் மாலைகள்
....
யார் கண் பட்டதோ ?!!
கண்ணீர் மழையானது
கானகம் விளைந்தது
நம் தாகமும் தீர்ந்தது..
இப்போது தான் புரிகிறது வாழ்க்கைப்பாடம்..
ஒருவரது கண்ணீர்
மற்றவரின் கண்ணீர் துடைக்கும் என்று..

எழுதியவர் : (19-Aug-17, 6:54 pm)
Tanglish : kanneer mazhai
பார்வை : 153

மேலே