ஆடைக்குள் புகுந்தாடும்

ஆடைக்குள் புகுந்தாடும் ஆனந்த பூங்காற்றே
மேனிக்குள் தென்றலாக தீண்டிவர வேண்டுமடி
சோலைக்குள் பூத்தாடும்
செம்பவள மதுமலரே
சேலைக்குள் பூவாக பூத்துவர வேண்டுமடி
கைபேசி வைத்து பேசும் விழிபேசும்
பெண்ணழகே
மை பூசி வந்தாயோ.மன்மதனை அழைப்பதற்கு
பட்டுக்குள் பளபளக்கும்
அழகிய தமிழ் மகளே
பொட்டுக்குள் நிலவாக நெற்றியிலே
நான் வரவா

எழுதியவர் : சௌம்யா செல்வம் (20-Aug-17, 11:55 am)
பார்வை : 254

மேலே