புரியவில்லை இன்னும்
.......புரியவில்லை இன்னும்......
நீ விட்டுச் சென்ற
காதல் புத்தகக்தில்-நம்
கடந்த காலப் பக்கங்களை
மீட்டிக் கொண்டிக்கிறேன்
நானும்...
விலகிய காரணங்கள் அதில்
விம்பமாய் தெரியாதா என்ற
ஏக்கத்தில்....
பழகிய நாட்களோ பார்த்துச்
சிரிக்கின்றன..
சுற்றித் திரிந்த பொழுதுகள்
எல்லாம் என் தனிமையை
வேடிக்கை பார்க்கின்றன...
இரவுகள் என் கனவுகளைக்
கொன்று குவிக்க..
பிரிவின் வலிகளோடு
உனக்காய் காத்திருக்கிறேன்
நீ விலகியதன் காரணங்கள்
புரியாமல் இன்னும்...
என் நினைவுகளை மீண்டும்
சிறைப்பிடிக்க இதயச்சாவி
நீயும் கொண்டு வருவாயா??
இல்லை என் இருதயம் இறந்து
போகும் வரை உன் மௌனத்தை
தொடர்ந்து கொல்வாயா..??