காகிதக்கடவுள்

மானுடம் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம்..
சேரிடம் அறிந்து
சேராத
காகிதக்கடவுள்...
பிடித்தவர்களை ஆட்டிப்படைக்கும்
பொல்லாதப்பிசாசு....
தேடி அலைபவற்கு நீ கானல் நீரானாய்
கோடி சேர்த்தவற்கு பயமே நீயானாய்
கொடுத்துப்பார்ப்பவற்கு
உன்னாலே பெருமதிப்பு
அள்ளி சேர்த்தவர் அறிவாரோ
இல்லாதோர் பறிதவிப்பு
இனியும் உன்னை இங்கு கடவுளென
போற்ற மாட்டோம்
காரணம்
அவன் நம்பினோரை விட்டதில்லை...


- பணம்-

எழுதியவர் : (21-Aug-17, 11:23 am)
பார்வை : 91

மேலே