இப்படி இன்னும் நாம் ஏன் வேண்டவில்லை
எனக்கு அது வேண்டும், இது வேண்டும்
என்று இறைவனிடம் நித்தம் நித்தம்
வேண்டி வழிபடும் நாம் - என்று தான்,
எனக்கென்றே வேண்டிடும் இந்த
குணம் போய் விட வேண்டும் என்று
வேண்டி வழிபடுவோமோ அந்நாள்
வந்து கூடிடுமாயின் மனிதன்
மனிதனைக் கண்டு பயந்து வாழும்
நாட்கள் காணாமல் போய்விடுமே !
மண்ணிலே விண்ணை கண்டிடலாமே நாம்