கட்டுவிரியன் கண்ணாடி விரியன்

வெண்ணிலா, இங்க வாடி.
😊😊😊😊😊
என்னங்க ஆச்சி.
😊😊😊😊
உங் கையக் காட்டு.
😊😊😊😊
எங் கையில இருக்கற கோலத்தைப் பாக்கறதுக்கு உங்களுக்கு ஆசையா ஆச்சி?
😊😊😊😊😊
தூ....கோலமாம் கோலம். மருதாணி எலையை அரச்சு உள்ளங்காலுக்கும் நகத்துக்கும் பூசுனா கைக்கு அழகு. ஒடம்பு சூடு தணியும். கடையல விக்கற பொடிய வாங்கிட்டு வந்து இயற்கையாகவே அழகா இருக்கற கைய கட்டுவிரியன் கண்ணாடி விரியன் ஆக்கி வச்சிருக்கற. நீயெல்லாம் ஒரு படிச்ச பொண்ணா? சினிமாக்காரிங்க எதச் செஞ்சாலும் அதே மாதிரி நீயும் செஞ்சா உனக்கும் விசிலு அடிக்கற ரசிகனுக்கும் என்னடி வித்தியாசம்?
😊😊😊😊
எந் தோழிங்க பேச்சக் கேட்டு என்னோட அழகான கைகளை அசிங்கப்பபடுத்திட்டேன். இனிமேல் இந்த விரியன் பாம்பு வேலை எல்லாம் செய்யமாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஆச்சி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
செயற்கைப் பொடிகள் ஆபத்தானவை.

எழுதியவர் : மலர் (21-Aug-17, 3:51 pm)
பார்வை : 206

மேலே