ஏன் நிறம் மாறினாய்

கருநாக விஷமாய்
என்னுள் பரவி

என்னை நிறம்
மாற்றினாய்

நீ மட்டும் ஏனோ
இன்று

நிறம் மாறினாய்?

விஷ முறிவு
வைத்தியம் தேட

விஷயம் தெரிந்தவர்
சொன்னார்

ஆலைக் கொள்ளும்
விஷமது

ஆறுக்கு நாலே
தீர்வென்று

அறிய தான்
ஆசை

என் பிழை
எதுவென்றே

அறிய முடியாதென
தெரிந்து

என்னை நானே

போர்த்திக் கொண்டேன்

உன் நினைவுகள்
எனைத்

தீண்டக் கூடாது
என்பதற்காக.

#Sekar_N

எழுதியவர் : சேகர் N (21-Aug-17, 4:19 pm)
பார்வை : 361

மேலே