ஏக்கம்

விலகிய நேரம் விழுந்த பாரம்
மனம் தாங்குமா? - அந்த
அழகிய காலம் கனவென உரைத்தால்
உயிர் தாங்குமா?

காற்றென சொல்லி காலம் கடக்க
தினம் பழகுறேன்! - இனி
வருகிற காலம் சில மணிநேரம்
உயிர் உறைகிறேன்!

பிரிவெனும் தழலில் விழுந்த பொழுது
ஆவி ஆனது ! - என்
இறுகிய மனதும் தனிமை தேடி
தோல்வி யானது!

ஜன்னல் ஓரம் நிலவின் ஔியில்
ஏக்கம் குறைக்கிறேன்! - இந்த
அழகிய தருணம் தினம் எதிர்பார்த்து
தூக்கம் தொலைக்கிறேன்!

நீயும் நானும் நடந்த பாதையில்
தண்ணீர் விழுகுதே! - மலர்
போற்றி படுத்த நீளப் பாதையில்
கண்ணீர் விழுகுதே!

உன்னை தேடி நான் அலைகின்றேனே
எங்கு இருக்கிறாய்!? - இந்த
தனிமை உலகில் ஆறுதலாக என்
மனதில் இருக்கிறாய்!

இன்னும் எத்தனை வருஷமோ ? காலமோ?
கொஞ்சம் பொறுத்திரு! - இந்த
தேடல் முடிவிலே உன்னை அடைகிறேன்
அன்று அழுதிடு!

ஒற்றை கேள்வியை கேட்க துடிக்கிறேன்!
என் ஞாபகம் உள்ளதா? - உன்னை
அறிமுகம் படுத்திய அற்புதக் காதல்
உன் நெஞ்சில் உள்ளதா?

இதோ! நிமிடம் முழுதும் ஏக்கம் வைத்து
வாடி உருகுறேன்! - என்
காலம் முழுதும் உன்னை தேடி
காலம் கடக்கிறேன்!

எழுதியவர் : (23-Aug-17, 8:33 pm)
Tanglish : aekkam
பார்வை : 133

மேலே