விசமப் புன்னகை

நான் எழுதிய கவிதைகளை
ஆவலோடு உன்னிடம்...
சமுதாயக் கவிதைகளை
அலட்சியப் படுத்தி
காதல் கவிதைகளையே
படிப்பாய்...
விசமப் புன்னகையுடன்!
மனதிற்குள் ரசித்தாலும்
மோசமாகத் திட்டுவதே
எனக்கு சுகம்...
தவித்துப் போகும் உன் மனம்
என்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
அல்லவா?

எழுதியவர் : கலாவிசு (23-Aug-17, 10:05 pm)
பார்வை : 66

மேலே