முதிர் கன்னி

துரு பிடித்த
சன்னல் கம்பிகளிடையே
நம்பிக்கையைத் தொலைத்த நிலா..
நீண்ட கால நினைவுகளின் இடையே
இதயத்தை தொலைத்து உலா..
வில்லை வளைக்கச் சொல்லவில்லை...
அம்பை விடவும் தேவையில்லை..
மீசை இல்லா விட்டாலும்
பரவாயி்ல்லை...
ஆசை வைக்காவிட்டாலும்
பாவமில்லை...
முதிர் கன்னி பெயரை
நீக்கவாவது ஒருவன்...
ஆசை தீர வெளியுலகைப்
பார்க்கவாவது ஒருவன்...

எழுதியவர் : கலாவிசு (23-Aug-17, 10:22 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 83

மேலே