அசிங்கப் பிறவிகள் அநேகம்

மிகப் பெரியதொரு நெறிப் பிறழ்வு
துன்பமே நமக்குத் தந்த போதிலும்
திகைத்து நல்லதொரு முடிவு எடுக்க
மறுப்பதும் ஒருவகை முடிவுதானே!

அறப்புறம் சூழ்ந்த தீங்கு அதனை
மறுபேச்சின்றி அணைப்பது அன்றோ
அவனியிதிலே பெருந்துயரம் எதுவென
கவனித்து நாம் பார்த்தொமெனில்
நேர்மை நம்புவோர் நெஞ்சந்தன்னில்
சேர்ந்திடும் பற்று சிறிதும் இல்லை
பற்றிடும் நெருப்பும் அவரிடம் இல்லை
ஆனால் நேர்மை நம்பார் நெஞ்சினில்
தானாய் ஊறிடும் பற்றும் கனலும்

தாகங் தீர்க்கத் தண்ணீர் கேட்டால்
சாகட்டும் தமிழன் எனும் கயவர்களை
வேகம் கொண்டு வசை பாடாமல்
இசைபடப் பேசித் தமது பதவியை
அசையாமல் பார்த்துக் கொள்ளும்
அசிங்கப் பிறவிகள் அநேகம் இங்கே..

எழுதியவர் : தா .ஜோ .ஜூலியஸ் (24-Aug-17, 12:05 pm)
பார்வை : 74

மேலே