எதையோ தேடி எதையோ பெற்று

எதையோ தேடி எதையோ பெற்று
இதைத்தான் தேடினேன் என்று
பொய் சொல்லி
அவர்களின் பொறாமையை
கொஞ்சம் ரசித்து
என் தோல்வியின் சோகத்திலிருந்து
விடுபட முயற்சி செய்வேன்
என்னையும் ஏமாற்றி
அவர்களையும் ஏமாற்றி
வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?

எழுதியவர் : (5-Dec-09, 2:39 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 851

மேலே