சில நேரங்களில் சில மனிதர்கள்.......

எழுதவந்த
கவிதை
எழுதியிருப்பது கண்டு
திரும்பிசெல்கிறேன்

எடுத்தவந்த
விதைகள்
துவியிருப்பது கண்டு
கொண்டுசெல்கிறேன்

சொல்லவந்த
வார்த்தைகள்
பொறிக்கப்பட்டது கண்டு
ஊமையாக போகிறேன்

செய்ய வந்த
சாதனைகள்
சாதிக்கப்பட்டது கண்டு
ஊனமாக செல்கிறேன்

வாழ்க்கை பயணத்தில்
சில நேரங்களில்
சில மனிதர்கள்
நாம் நினைத்ததை
சத்தமில்லாமல்தான்
சாதித்து செல்கின்றனர்....................

எழுதியவர் : Prakash G (7-Aug-10, 2:43 am)
பார்வை : 1167

மேலே