இதுதான் காதலா..........??????????? (சிறுகதை)

தருண் மிக அழகும் அறிவும் பண்பும் நிறைந்தவன், பல பெண்கள் அவனில் காதல்கொண்டும் எந்தப் பெண்ணின் காதல் வலையிலும் சிக்காதவன்......
படிப்பினில் மிகக் கெட்டிக்காரன்.

ஆனால் அவனையும் காதலில் விளைவித்தது ஒரு புன்னை பூ......
அவள்தான் அவன் மனத்தைக் கொள்ளைகொண்ட தியா....


அவனை காதலித்த எந்தப் பெண்ணையும் போல் அவள் அழகில்லை......
நிறமில்லை......
ஆனாலும் அவளிடம் அவனை ஈர்த்துவிட்டது எதுவென்று புரியவில்லை எவர்க்கும்......
அவன் தொழர்களிட்கும் கூட.....

அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்...
அவன் அவள்மீது அன்பினை வற்றாக் கடல்போல் பொழிந்தான்....
அடிக்கடி அவனிடம் அவள் ஒன்றைக் கேட்டுக் கொள்ளமட்டும் மறந்ததில்லை....
தருண் நீ என்னைக் கைவிட்டிட மாட்டியேடா.......?
அவன் அவளைக் காதல் பொங்க என்ன வார்த்தம்மா நீ கேட்டா....?
நீ என் உசிரும்மா நீ இல்லேன்னா நானே இல்ல என்று உருகினான் மெழுகாக அவளில் காதல் கொண்டு.....

காலம் கடந்தது அவள் உலகைக் காண ஆசை கொண்டால்.... அவனிடம் அதை அன்பு மிகுந்த வேலை உரைத்தாள்.....
தருண் உன்னை உன் அழகை இந்த உலகை எனக்கும் காண ஆசையாக உள்ளதுட எண்டாள்.....

ஆமாம் அவள் ஒரு பார்வை அற்றவள்தான்...
அவளைத்தான் தன் உயிராக நேசித்தான் அந்த வள்ளல் ....

தன் காதலியின் ஆசைகளை நிறைவேற்ற எண்ணியவன் தன் கண்களைத் தானம் கொடுக்க நினைத்தான்.....
அவளிற்கும் சிறப்பாக கண் சத்திரசிகிச்சை முடிந்தது...
அவன் அவளிடம் கேட்டான் தியா நாம கல்யாணம் முடிச்சிக்கலாமா....?
எப்போ பண்ணிக்கலாம்
என்றவனின் முகத்தை நோக்கியவள் இல்லை உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குவதா....?
முடியாது எண்டாள்...
பெரு மலையே அவன் மீது இடிந்து விழுந்ததை உணர்ந்தான்............
ஆமாம் அவள் வேண்டாம் என்டதட்கு காரணம் அவனிற்கு பார்வையில்லை.......!!!

ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?

என்னில் இத்தனை அன்புகொண்ட அவனை நான்
வெறுத்துவிட்டனே என்று வருத்தம் கொண்டாள்
அவனை ஓடிச்சென்று கட்டித்தழுவிக் கொண்டாள் இன்பமாக.......

இன்பமிகு வாழ்க்கைக்கு தேதி குறிக்க திட்டமிட்டு விடைபெற்றான் தன் காதலியின் அணைப்பின் நினைவுகளையும் அவள் எண்ணங்களையும் மனதில் சுமந்தவனாக..........






எழுதியவர் : ammu.................. (28-Nov-11, 5:25 pm)
பார்வை : 1204

மேலே