தொலைந்து போய் விட்டது அந்த வசந்தகாலம் ...! ! ! ! !

காக்கி கலர் கால் சட்டையும்
கட்டம் போட்ட லுங்கியும் ,,
அந்த பொட்டல் புழுதியில் என்னோடு சேர்ந்து
அழுக்காகும் ......
நான் கபடி விளையாடும் போது...!!!!!!

கட்டை விரலை நிலத்தில் ஊன்றி...
நடுவிரலின் வித்தையால் சேர்த்த கோலிக்குண்டுகள் ...!!!!!

தண்ணீர் இல்லாத ஏரியில்
நண்பர்களோடு விளையாடிய கிட்டிபுல்...!!!!!

ஆடி மாத மாரியம்மன் கோவில் கூழ் குடிக்க
சண்டை போட்டு நின்ற வரிசை...!!!௧

தாத்தா செய்து கொடுத்த பம்பரம்,
சரியில்லன்னு அழுது புரண்டு,
அடி வாங்கி நாடார் கடையில்,
வாங்கிய சிகப்பு கலர் பம்பரம்....!!!!!

ஐஸ் பெட்டிக்காரனிடம்
பாட்டில் கொடுத்து வாங்கி சுவைத்த குச்சி ஐஸ்.!

இமையமலையை பிரித்தது போல்.....
என்னை விட்டு பிரிந்த
சின்ன வயது வசந்தங்களை
நினைக்கும் போது...!!!!
உதட்டில் ஓரத்தில்
உருக்கமான சின்ன புன்னகை....!!!!
கண்களின் ஓரத்தில்
சாந்தமான ஈரம்...!!!!

எழுதியவர் : ஆசைதம்பி (30-Nov-11, 12:05 am)
பார்வை : 863

சிறந்த கட்டுரைகள்

மேலே