உனது அடையாளம்

ஒரு நல்ல ரசிகனே ஒரு நல்ல கவிஞன்


ஆக முடியும் வாமனனாக வந்தவன்தான் வான் அளந்தான்


ஈரடியில் எழுதுதிய வள்ளுவர்தான்


இலக்கியத்தில் உயர்ந்து நிற்கின்றான்


எந்த மொழியில் எழுதினாலும் மற்றவரை ரசிப்பது போற்றுவது ஒரு


நல்ல கவிஞனின் கவிப் பண்பு அதற்காக


அன்ன நடை கறக்கப் போய் தன்


நடையை இழக்கத் தேவை இல்லை


I ONLY APPRICIATE I DO NOT ADMIRE


போற்றுதல் பாராட்டுதல் சிறந்தது


அதீத மோகத்தில் தன்னை இழப்பது


உன்னை தனியாக அடையாளம்


காட்டாது ஆரம்பத்தில் போல எழுதுவது


ஒத்திகையாய் இருக்கலாம் போலச்


செய்பவன் சிறந்த நடிகன் ஆகலாம்


போல எழுதுபவன் தன் தனி அடையாளத்தை இழந்து நிற்பான்


இறைவனை இறைவன் படைத்த


இந்த இயற்கையை மானுடத்தை


அவனவன் மனோதர்மப்படி பாடுபவன்


ஆதர்ச அடையாளமாக காலத்தை


வென்று நிற்பான்


தமிழ்தாசன் தங்கள் ஆதரிச ஆசைக்கு


என் மனமுவந்த வாழ்த்துக்கள்

---கவின் சாரலன்

கவிக் குறிப்பு
"நான் என்பதன் அடையாளம் " என்ற தமிழ் தாசனின் கவிதைக்கு நான் அளித்த கருத்து
நீங்களும் படியுங்கள்
---அன்புடன்,கவின்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-11, 10:52 am)
பார்வை : 566

சிறந்த கட்டுரைகள்

மேலே