முதல் கவிதை

கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!

எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!

சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!

எழுதியவர் : சரண் (23-Jan-12, 1:01 pm)
Tanglish : muthal kavithai
பார்வை : 9200

மேலே