நம்பினார் கெடுவதுண்டு!!!

லண்டனில் கிரிக்கெட் போட்டி.
விரல் விட்டு என்னும் அளவே கூட்டம்.
இறுதி கட்டம் அடையும் சமயம்.

என் போறாத வேலை.
பிதுங்கிய விழிகளுடன்,
களத்தில் நிற்கிறேன், பேட் செய்ய.

இன்னும் 12 ரன்கள்.
ஆறே பந்துகள்.
அடித்து மட்டுமே ஆடவேண்டும்,
என்ற நிர்பந்தம்.

ஆண்டவனை துதிதுக்க் கொண்டு.
ஆடாமல், அசையாமல்,
பௌலரை வெறித்து பார்த்தபடி,
விறைத்து நிற்கிறேன்.

முதல் பந்து வீச,
முருகப் பெருமானை நினைத்து,
பேட்டை முறுக்கி வீசினேன்.
பந்து பேட்டில் மட்டும் படவில்லை.

விரக்தியில், கொஞ்சம் வியர்துபோய்,
ஸ்வெட்டரை கழட்டினேன்.
ஒரு டிகிரி குளிரும் என்னை உஷ்ணம் ஏற்றிற்று.

இரண்டாவது பந்து,
எட்டி அடிக்க எகிறினேன்,
பந்தோ கால் சந்தில் புகுந்து,
கீப்பரை அடைந்தது.

திரும்பவும் விரக்தி,
இந்த முறை கழட்டி போட
எதுவுமின்றி, கப் சிப் என்று நின்றேன்.

வெளியில் இருந்த கிருஷ்ணன்,
கொலை வெறியில் கத்தினான்..
இப்போது வெளியே வர முடியுமா?
முடியாதா? என்று..

இந்த கேள்வி என் காதை கூசியது.
வந்த மூன்றாம் பந்தை,
தூக்கி அடிப்பதா?
இல்லை தரையோடு ஆடுவதா?
என்று யோசிக்கும் போது,
வீசிய பந்தே என் பேட்டை தொட்டுவிட்டு,
கீப்பரின் கையில் அமர்ந்தது.

தலை தொங்கியபடி,
பெவில்லியன் அடைந்தேன்.
வெட்கமாக இருந்தாலும்,
முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டேன்.

தோல் தட்டியபடி உள்ளே அனுப்பினர்,
என் சகாக்கள்.
கிருஷ்ணன் மட்டும் அடங்கா கோபம்
கொண்டே ஆர்பரித்தான்.

அவனை சமாதானம் செய்யத் தெரியாமால்
யோசிக்கும் வேளையில்,
எங்களின் போட்டி முடிந்தது.
நாங்கள் தோற்றும் போனோம்.

இவன் கோபம் இன்னும் அதிகமாயிற்று.
ஏன் என்று யோசித்தபோது.
தலையில் யாரோ சமட்டி கொண்டு
அடித்தார் போல் உதித்தது ஒன்று.

ஆம் கிர்ஷ்ணனை இன்று
ஏர்போர்டில் விட உறுதியளிதிருந்தது!
மணியோ 4 .30 .
இவன் விமானமோ 5 .30 க்கு.

செய்வதறியாமல் டாக்சிக்கு
போன் அடித்தேன்.
எவனும் எடுக்கவில்லை.

இதை பொங்கிய பார்வை கொண்டு
பார்த்த கிருஷ்ணனிடம்,
பஸ்சில் செல்லாம் என்றேன்.

மௌனமாய் பின் தொடர்ந்தான்.
நானும் மௌனத்தை கலைக்க,
கதகளி ஆடியும், காண்டு
குறையாத காண்டா மிருகமாய் காட்சியளித்தான்.

எனக்கோ வயிறு கலக்கியது,
கோபத்தில் அடித்து விடுவானோ என்று.

சிறிது இடைவெளி விட்டு சொன்னேன்,
இந்த ஏர்போர்டில் சனிக்கிழமை மட்டும்
விமானம் தாமாதத் தோடே கிளம்பும்.
தெரியும் தானே உனக்கு என்றேன்.

கொஞ்சமும் சிரிக்காமல்,
இன்று ஞாயிற்றிக் கிழமை என்றான், கிருஷ்ணன்.
பதில் சொல்ல வராமல்,
வாயை பொத்திக் கொண்டேன்.

ஏர்போர்ட் வந்து,
தலைவெரிக்க ஓடினேன்
ஏதோ ஒரு வெறி நாய்
துரத்துவதாய் எண்ணிக்கொண்டே.

கிருஷ்ணனோ கிண்டர் கார்டன்
குழந்தை போல் தத்தி தத்தியே வந்தான்.

விமானம் கிளம்பியதை,
செக்கின் கவுன்டரில்
விசாரித்துக் கொண்டு,
இடிந்து போய்
கிருஷ்ணனிடம் ஓடிச் சென்று
ஓதினேன்.

இது தெரிந்த விஷயம் தான்,
என்று தெனவெட்டாய் சொன்னான்.

மன்னித்து விடு,
எல்லாம் என் தப்பென்றேன்.
இல்லை என் தப்பு தான்
என்றாம் கிருஷ்ணன்.

அப்படி சொல்லாதே கிருஷ்ணா,
தப்பு என் மேல் தான் என்றான்.

அதற்கு கிருஷ்ணன் கேட்டான்,
உன்னை நம்பிய யாரும்,
உருப்பட்டது இல்லை என்று தெரிந்தும்!
நம்பினேன் உன்னை,
நாசமத்தும் போனேன்.

இப்போது சொல்,
தப்பு யாருடையது என்று?

எழுதியவர் : கணேஷ்குமார் balu (24-Jan-12, 6:40 am)
பார்வை : 977

மேலே