எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
என் தாயிற்கு நன்றி சொல்ல - வாழ்க்கை கவிதை

என் தாயிற்கு நன்றி சொல்ல 

நன்றி சொல்ல நல்மனம் வேண்டும்
மன்னிப்புகேட்க தாராளமான மனம்படைத்திருக்க வேண்டும்
மன்னிப்பு வழங்க சுயநலமற்ற முழுமனதும்,
கடவுளின் குணமும் வேண்டும் -
பெரும்பாலானோர் நடைமுறை வாழ்வில்,
இவையனைத்தும் தாயிடம் கண்டிருக்க வேண்டும். ஆதலாலே
தாயை, வாழும் இவ்வுலகில்
கடவுளுக்கு நிகராகவும்,
நம் உயிருக்கு பொருளாகவும்
போற்றிவருகின்றனர்.

என் தாய்,
இஜ்ஜென்மத்தில் எனக்கு கிட்டியதற்கு
நான்தான் என்னதவம் என்று செய்தேனோ...?
படைத்த கடவுளுக்கு நன்றி - எனை
அன்று வயிற்றில் சுமந்து
இன்றும் என்றும் மனதில் சுமக்கும்
என் தாயிற்கு
என்றென்றும் என் பணிவான வணக்கங்களையும்,
மனமார்ந்த நன்றிகளையும்,
பணிவன்புடன் தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாது
என்றென்றும் அவர்க்கு பணிவிடை செய்யவும் கடமைப்பட்டுள்ளேன்.


மொத்த தேர்வு :

4

சராசரி தேர்வு :

2

x

email


எழுதியவர் :A பிரேம் குமார்

நாள் :28-01-2012 01:25:20 PM
Added by :A. Prem Kumar
பார்வை :182


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்
Naveenaa03-February-12 10:17 AM

மிக்க நன்று..தாய் பற்றி தெளிவாக சொல்லிவிட்டிர்கள் . .இதை படித்த பின்பாவது அம்மாவை மதிக்காதவர்கள் திருந்தட்டும் .. .


பதில் அளி

0 வாக்கு

  

A. Prem Kumar03-February-12 2:10 PM

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, நவீனா.



அனைத்துத்தரப்பினரிடமும் என் பணிவான வேண்டுகோள் : அன்னையை மதித்து அன்பைக்காட்டுங்கள்; அனைத்து நலன்களும் பெறுவீர்.



அன்புடன், A பிரேம் குமார்


பதில் அளி

0 வாக்கு

  

sirkazhi sabapathy29-January-12 12:38 PM

தாயே நம் கண்முன் நிற்கும் தெய்வம்...


பதில் அளி

0 வாக்கு

  

A. Prem Kumar29-January-12 1:14 PM

மாற்றமற்ற பொது உண்மை.



தங்கள் கருத்துக்கு நன்றி.


பதில் அளி

0 வாக்கு

  

Rajesh 0329-January-12 12:36 PM

தாய் மீது கொண்டுள்ள உங்களின் பாசம் ...

வரிகளில் வீசுகிறது வாசமாய்! சுவாசமாய்!


பதில் அளி

0 வாக்கு

  

A. Prem Kumar29-January-12 1:13 PM

ஆம், அவர் எனது உயிர் மட்டுமல்ல

இம்முழுஉலகமே.



தங்கள் கருத்துக்கு நன்றி.


பதில் அளி

0 வாக்கு

  

Amutha Ammu28-January-12 8:42 PM

தவறு செய்வது மனிதனின் இயற்க்கை அதை மன்னிப்பது மிக உயர்த குணம் . இதை நம்மை அறியாமலே கற்றுத்தருபவள் தாய் . அருமையான கவிதை .


பதில் அளி

0 வாக்கு

  

A. Prem Kumar28-January-12 9:12 PM

தங்கள் கருத்துக்கு, மிக்க நன்றி.




பதில் அளி

0 வாக்கு

  





நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me