kaadal
கண்விழித்ததும் கண் உன்னை தேடியது
வீட்டுமுற்றத்தில் நீ,
வெள்ளைதுண்டு ஈரத்தலைமுடியில் கிரீடமாய்,
அரிசி மாவு வீட்டு முற்றத்தில்கீழ் வானத்து வண்ணங்களாய்,
மாட்டுச்சாணம் கூட பூ பூக்கிறதே மார்கழியில்
உன் கரம் பட்டதாலோ,
நேற்று வாங்கிய மல்லிகை இன்னும் குளிர்சாதனபெட்டியில்,
இன்றைய பொழுது இனிதாய் மலர
உன் கரம்படவேண்டும்,
காத்திருக்கிறோம்....
மலரும் நானும்...