IRUNTHAAL .....

இன்னோர் மேனி எனக்கிருந்தால் - அதை
இலவம் பஞ்சால் செய்திருந்தால்.....
இன்னும் இருகை காலிருந்தால் - அவை
இளம் வாழை தண்டுகள் போலிருந்தால்.....


இன்னும் இரண்டு கண்ணிருந்தால் - அவை
என்வழித் தடத்தை சொல்லித் தந்தால்......
இன்னும் இரண்டு இதழிருந்தால் - அவை
என்தாகத் திற்கு அள்ளித் தந்தால்......

இன்னும் இரண்டு எனக்கிருந்தால் - அவை
இரண்டும் உருண்டு திரண்டிருந்தால்.....
இல்லாத ஒன்றும் இருந்திருந்தால் - அவை
இடை படும் பாட்டை பட்டிருந்தால்......

இருந்தால் இருந்தால் எனச் சொல்லும் - அவை
எல்லாம் இருக்குது ஒருத்தியிடம்
அவள் மட்டும் எனக்கு கிடைத்து விட்டால் - அவள்
அனைத்தும் எனதென்றாகி விட்டால்...

கேட்டதெல்லாம் எனக்கு கிடைத்து விடும் - நான்
கேட்காத இறக்கைகள் முளைத்து விடும்
நினைத் ததெல்லாம் உடன் நடந்து விடும் - நான்
நினைக் காத நன்மைகள் தழைத்து விடும்

பொன் வண்ண மேனியின் மேலேறி - தினம்
போய் வருவேன் நான் பொன்னுலகம்
பூங் கிண்ணத்தில் செந் தேனூற்றி - நான்
போதை கொள்வேன் அது என்னுலகம்







எழுதியவர் : PAAVAI-ABBAS (2-Sep-10, 12:58 am)
சேர்த்தது : abbasghani
பார்வை : 358

மேலே