[95] மகிழ்ச்சி கிட்ட.. ..!

புற அழ கில்லை மூலதனம்! -நீ
புற முது கிட்டால் கோழைத்தனம்!
அறிவுக் கிடங்கோடு! அதுபலம்! -உன்
அடக்கத்தின் உயர்ந்தது இல்லைகுணம்!

ஏன்?எனக் கேட்கப் பழகிவிடு! -பின்
எப்படி என்பதை யோசித்திடு!
தானதைச் செய்திடும் முயற்சியெடு! -அதில்
தளரா துழைக்கும் பயிற்சிபெறு!
ஆனது வரட்டும்! பயத்தைவிடு! -உன்
ஆக்கமே பயன்தரும், அமைதியுறு!

போனதை நினைத்துப் புலம்பல்விடு! -நீ
பொருளென நினைப்பதைத் தேர்ந்துவிடு!
வானது வாயினும் எட்டிவிடும்! -உன்
வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டிவரும்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Feb-12, 1:48 pm)
பார்வை : 257

மேலே