எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
!!! கேள்விகளால் சில  கேள்விகள் !!! - கட்டுரை

!!! கேள்விகளால் சில கேள்விகள் !!! 

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா! ஆனால் நமக்கு பகுத்தறிவு மிகவும் அவசியம் அய்யா இதை உங்களால் மறுக்க முடியுமா...???
பகுத்தறிவு இல்லாமல் நீங்கள் சொன்ன விஞ்சானிகள் எல்லாம் விஞ்சானிகளாக ஆகியிருக்க முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும், உங்கள் அளவுக்கு எனக்கு சிந்தனை இல்லை என்றாலும் எனக்கு தெரிந்த கருத்தை கூறுகிறேன், இங்கே கடவள் என்ற பெயரில் நடக்கும் அநியாயங்களை மக்கள் கண்கூடாக கண்டுகொண்டு இருக்கிறார்கள், கடவள் என்ற பெயரில் மத வெறியாட்டங்கள் நடந்தேறுகின்றன, கடவளின் போதனைகளை நமக்குணர்த்தும் போதகர்கள் சிற்றின்பத்திற்கு அடிமையாகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரசுக்கு தெரியாமல் பணக்குவிப்பு, இப்படி எல்லாம் கடவள் பெயரைச்சொல்லி கடவளையும் மக்களையும் ஏமாற்றி ஏகபோகமாய் வாழ்பவர்கள் நாட்டில் இல்லையா? இவர்களை கடவளால் என்ன செய்ய முடியும்? இவர்களை நம்பிய மக்களின் நிலை என்ன?
வெளிச்சத்தில் நின்றுகொண்டு இருட்டை பார்த்தால் இருட்டில் ஏதோ ஒரு உருவம் இருப்பதை போல் தோன்றும் ஆனால் அந்த இருட்டில் ஒரு விளக்கை ஏற்ற யாரும் முன் வரமாட்டார்கள் அப்படி யாராவது துணிந்து சென்று அந்த இருட்டில் ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் அங்கு உள்ள இருள் அகன்று வெளிச்சம் வந்துவிடும் அப்பொழுது அந்த இடத்தில் எதுவுமே இல்லாமல் வெறுமையாய் இருக்கும், நாம் கண்டது வெறும் மாயையாய் தோன்றும், அங்கு யாருமே விளக்கு ஏற்ற முன்வராமல் அப்படியே விட்டுவிட்டால் அந்த இருட்டில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தனக்குத்தானே எல்லோரும் உறுதி செய்ய தொடங்கிவிடுகிறார்கள் இந்த பதிவு பல சந்ததியர்களை முட்டாளாக்கிவிடுகிறது, இருளை அகற்ற ஒரு தீக்குச்சி போதும் அந்த தீக்குச்சிதான் பகுத்தறிவு, தன்னைத்தானே சோதித்து அறிபவனும் எந்த ஒரு செயலையும் ஆய்வுக்கு உட்படுத்துபவனும்தான் பகுத்தறிவாளி, யார் எதை சொன்னாலும் உடனே நம்பிவிடுபவனை பகுத்தறிவாளி என்று கூறிவிடமுடியாது,
இல்லை என்றால் ஏழு மரங்களுக்கு அப்பால் நின்று ராமன் எய்த அம்பு ஏழு மரங்களையும் துளையிட்டு வந்து எட்டாவதாய் வாலியை கொன்றதை இன்னும் நாம் நம்பிக்கொண்டு இருப்போமா? ராவணனுக்கு பத்து தலை என்பதையும், தசரதனுக்கும் அறுபது ஆயிரம் பொண்டாட்டிகள் என்பதையும், சஞ்சீவி மலையை ஒற்றைக்கையால் அனுமார் தூக்கிகொண்டு பறந்து வந்தார் என்பதையும், சிவனோட விந்துவை கிருஷ்ணன் கையில் ஏந்த உடனே ஐயப்பன் உருனானார் என்பதயும் நாம் இன்னும் நம்பிக்கொண்டு இருப்போமா...??? இதை நம்புவத்தின் பலன்தான் என்ன...???
ஐந்து கணவன்களுக்கு ஒரு மனைவி என்ற பஞ்ச பாண்டவர்களின் ஆரிய புராணம் நாகரீகமானதா? இது நம் தமிழர் பண்பாடா ? அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடா? இந்த நம்பிக்கைகளெல்லாம் எப்படி இங்கே முளைத்தது? யார் விதைபோட்டது? ஒரு கனம் யோசித்து பாருங்கள் அய்யா.
ஏழைத்தாயின் வற்றிய மார்பில் பால் வராமல் குழந்தை கதற...தகக்குமட்டும் குடம் குடமாய் பால் அபிசாகம் செய்ய சொல்பவரா கடவள்? உழைப்பாளிகளின் தலைகள் காய்ந்து முடிகளெல்லாம் செம்பட்டை பாய்ந்து கிடக்க தனக்குமட்டும் குடம் குடமாய் நெய் அபிசாகம் செய்ய சொல்வாரா கடவள்? இங்கே கோவில் உண்டியல்களுக்கும் கடவள் சிலைகளுக்கும்கூட காவல்த்துறை தேவைபடுகிறதே ஏன்? கடவளால்கூட கடவளை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா? ஆதிகாலத்தில் சொன்னதை அப்படியே நம்பிவிடாமல் இன்றைய காலகட்டத்திற்கு நாமும் கொஞ்சம் யோசிக்க வேண்டுமா? வேண்டாமா?
நீங்கள் சொல்வதைபோல் நம்ம விஞ்சானிகள் நிறைய கண்டுபிடித்தார்கள் என்று சொல்வதைவிட குறைவாகத்தான் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் என்னை பொறுத்தவரை உண்மை, ஏனென்றால் இன்று நாம் அடிப்படை அத்தியவாசியமாக அதிகமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கும் அணைத்து பொருட்களுமே அயல் நாட்டு விஞ்சானிகளின் கண்டுபிடிப்புகள் என்பதை மக்களே அறிவார்கள்.
நீங்கள் சொல்வதைபோல் மனிதனை மீறிய மிகப்பெரிய சக்திதான் ஐம்பூதங்கள் அதனால்தான் மனிதன் அதை கடவளாக்கிவிட்டான். இவன் எதைத்தான் விட்டு வைத்தான்?

கடவள் எங்கே இருக்கிறான் அவன் உண்மையான அன்பு செலுத்தும் ஆத்மாக்களில் இருக்கிறான் என்று திருமதி அம்மு என்கிற அமுதா அவர்கள் சொன்னது உண்மையிலேயே ஏற்கக்கூடிய கருத்து என்று அவர்களின் கருத்திற்கு நான் எனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த உலகத்தில் எல்லாமே தெரிந்த
அறிவாளியும் இல்லை
எதுவுமே தெரியாத
முட்டாளும் இல்லை....

கடவள் நம்பிக்கை உள்ளவர்கள் என்மீது வருத்தப்பட வேண்டாம் கொஞ்சம் சிந்திப்பதற்காக வேண்டி எனக்கு தெரிந்த சிறிய கருத்தை சொன்னேன் அவ்வளவுதான்.

குறிப்பு;. சிந்தனை கங்கை கவின்சாரலன் அவர்களின் கருத்தின் கருத்திற்காக பதில் கருத்து.


மொத்த தேர்வு :

45

சராசரி தேர்வு :

3

x

email


எழுதியவர் :நிலாசூரியன். தச்சூர்

நாள் :23-02-2012 12:01:29 PM
Added by :nilasuriyan
பார்வை :240


நண்பர்களும் பார்க்க

share with orkut Share

Get Code


1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துகள்
sankaran ayya23-February-12 6:23 PM

நீங்கள் விரித்துரைத்திருப்பது மதத்தின்

மற்றதின் பெயராலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக அவலங்கள் .

ஏழ்மை வறுமை இல்லாமை .

அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன ? அடுத்த தேர்தலில் தீர்வு காணலாம்.... இப்படி

60 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன

அடுத்து நீங்கள் விமர்சித்திருப்பது

ஆலயம் இறைவன் இறை நூல்கள்

அது உங்கள் கருத்து. நான் அதை

மாற்றுவதற்கில்லை

மனித மூளையின் ஆறாம்நிலை

அறிவு அல்லது பகுத்தறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது அதற்க்கு அப்பால் மனிதனை எடுத்துச் செல்கிறது

ஆன்மிகம் என்கிறது தத்துவ நூல்கள்

நீங்களும் சிந்தனை கங்கையில்

மூழ்கினால் சில விளக்கங்கள் கிடைக்கலாம் அதுதான் நான் சொல்ல

வந்தது பகுத்தறிவு பற்றி பேசுகிறீர்கள்

ஆதலினால் சிந்தனையின் உயரிய

நிலையிலிருந்து பார்பீர்களானால்

பார்வையின் கோணமும் வித்தியாசப்படும் பார்க்கின்ற பொருளின் பிரத்தியச்சமும் சற்று

தெளிவாகும்

தீக்குச்சி ஒளியில் இருள் விலகும் என்று

சொல்கிறீர்கள். மறையின் கூற்றும்

அதுவே "தமசோ வா ஜோதிர்கமய "

--இருளில் இருந்து ஒளியை நோக்கி

ஓம் தத் சத் ஓம் என்பதே தத்துவம்

ஓம் என்பதே சத்தியம்

ஒளிமிகு நிலாவையும் சூரியனையும்

பெயரில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

இருளை விளக்குவது அவ்வளவு

உங்களுக்கு அவ்வளவு கடினமா ?

உங்களுக்காக எனது ஒரு கவிதை



இறைவன் ஆலயத்தில்

வாழ்கிறான்

இல்லாதவன் வறுமையில்

வாழ்கிறான்

அரசியல்வாதி சுரண்டலில்

வாழ்கிறான்

கவிஞன் சொல்லில்

வாழ்கிறான்

சொல்லியே

முடிக்கிறான்

---அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  

nilasuriyan26-February-12 10:22 AM

கோவில்கள், சிலைகள், இறைவனை பற்றிய நூல்கள், மதங்கள் இவைகளுக்கும் கடவளுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறீர்களா? அப்படி என்றால உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன், இவைகளை பற்றி எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது அது என்னவென்றால் கடவளின் பெயரில்தான் இங்கே அதிகமான மூடநம்பிக்கைகள் அவதரித்து இருக்கின்றன அதனால்தான் சில எடுத்துக்காட்டுக்களை நான் கூறவேண்டியதாயிற்று, இங்கே ஒவ்வொரு மனிதனும் கடவள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் கோவில் கோவிலாய் கடவளைத் தேடி அலைவதையும், பூஜைகள் புனஷ்காரங்கள் செய்வதையும் நாம் கண்டுகொண்டுதானே இருக்கிறோம் அதற்காகத்தான் சில எடுத்துக்காட்டுகள்.

மனிதனுக்கு ஆறு அறிவு மட்டும்தான் உண்டு என்று திட்டவட்டமாக தெளிவாக எப்படி நீங்கள் முடிவு செய்கிறீர்கள்? ஏன் பதினைந்து இருபது அறிவு இருக்காதா? அல்லது நான்கு அறிவு ஐந்து அறிவு இருக்காதா? இப்படி எல்லாம் கேட்டுகொண்டே போகலாம் என்னிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது நான் நிறைய கேட்டால் நமது கருத்து பரிமாற்றம் ஆரோக்கியம் இல்லாமல் போய்விட்டால் நன்றாக இருக்காது அதனால் நான் கேட்க முற்படவில்லை,

பகுத்தறிவையும் தாண்டி ஆத்மா அறிவு ஒன்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள் நான் ஏற்றுகொள்கிறேன் ஆனால் அந்த ஆத்மா அறிவையும் கண்டு கொள்ள பகுத்தறிவால் மட்டுமே முடியும் என்பதுதான் என்னுடைய தெளிவான கருத்து. பகுத்தறிவுதான் அறிவுகளிலேயே மிகப்பெரிய அறிவு, நாம் ஏழாவது அறிவுக்கு செல்லவேண்டுமென்றால் பகுத்தறிவின் துணையின்றி செல்ல முடியாது என்பதுதான் நான் கூறுவது. பகுத்தறிவின் துணையின்றி நாம் இங்கு எதையுமே செய்ய முடியாது உயர்திரு கவின் சாரலன் அவர்களே.

நீங்கள் எனக்கு உபதேசித்த மந்திரங்கள் எனது தாய் மொழியில் உருவாக்கப்பட்டதா? அல்லது சமஸ்து கிருஷ்தத்தில் இருந்து தழுவியதா? இந்த கட்டுரையை படிப்பவர்கள் இந்த மந்திரங்களை உச்சரித்து பயன் அடைந்தாள் நமது கருத்து பரிமாற்றளுக்கு ஒரு புண்ணியம் உண்டு, யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்.

எனக்காக நீங்கள் சொன்ன கவிதையில் கடவள் கோவிலில் இருக்கிறான் என்று சொல்லி இருப்பது தொடக்கத்தில் இருந்து தொடர வைக்கிறது, இதை நான் ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, கடவள் தூய்மையான அன்புள்ளம் கொண்ட ஆத்மாக்களில்தான் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் கோவில்களில் அல்ல இதைதான் திருமதி அமுதா அவர்களின் கருத்தும் எனது கருத்தும்.



நன்றி திரு கவின்சாரலன் அவர்களே தாங்கள் எனக்கு சொன்ன கருத்துக்களில் நிறைய தெரிந்து கொண்டேன்.


பதில் அளி

0 வாக்கு

  

Amutha Ammu23-February-12 12:29 PM

கடவுள் எங்கே இருக்கிறார் என்று அழகாக விளக்கி விட்டீர்கள் . நீங்கள் கேட்ட கேள்வி அனைத்து பகுத்தரிவாலர்கலையும் சிந்திக்க வைக்கும் .


பதில் அளி

0 வாக்கு

  

nilasuriyan23-February-12 12:33 PM

நன்றி திருமதி அமுதா அவர்களே... உங்களோட இறைவன் எங்கே இருக்கிறான் என்ற கவிதையால் வந்ததுதான் இந்த ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம்.


பதில் அளி

0 வாக்கு

  

priyaram23-February-12 12:19 PM

நல்ல பகுத்தறிவு ....சிந்திக்க வேண்டிய கருத்துகள் ...


பதில் அளி

0 வாக்கு

  

nilasuriyan23-February-12 12:34 PM

நன்றி தோழி ப்ரியா.......


பதில் அளி

0 வாக்கு

  




நண்பர்களின் கருத்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me