ஆண்டவன் படிக்காத அரிச்சுவடி


மனிதனுக்கு 'மதம்' பிடித்தது..
ஆயுதங்களோடு அணி திரண்டான்!!

வெட்டரிவாள் வீச்சரிவாள்
வெடிகுண்டோடு
வீதியில் வலம் வந்தான்

அன்றைக்குப் பார்த்து அப்பாவித்தனமாக
பூமியைப் பார்வையிட வந்த
ஆண்டவன் அவர்களிடம்
அகப்பட்டுக் கொண்டான்!

'வெட்டு' என்றது ஒரு வீரக் குரல்
'விவரம் கேட்டுவிட்டு வெட்டு'
என்றது இதயம் உள்ளதோர்
ஈரக்குரல்

'எந்த மதமடா நீ?'
- கேட்டது கூட்டம்

அர்த்தங்களுக்குள் அர்த்தமாய் இருக்கும்
ஆண்டவன்
அர்த்தம் புரியாமல் விழித்தான்!!

எழுதியவர் : மு. மேத்தா (2-Jan-10, 5:53 pm)
பார்வை : 827

மேலே