தன்னை உணராதவர்கள் ..... சிறுகதை .....

காட்டிற்குப் போன வேட்டைக்காரன் ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தான். அதை தன் வீட்டில் அடைக்காக்கும் கோழிக்கூட்டில் வைத்தான். கொஞ்ச நாளில் குஞ்சிகள் வெளிவந்தன.

கழுகு முட்டையும் குஞ்சானது.மற்ற கோழிக்குஞ்சுகளோடு இந்த கழுகு குஞ்சும் சேர்ந்து திரிந்தது. க்யா.. க்யா என கத்தியது. அவைகள் குப்பைகளைக் கிளறி புழுப் பூச்சிகளைப் பிடித்து தின்றதைப் போலவே இதுவும் தின்றது. வருடங்கள் ஓடின. எல்லாக் குஞ்சுகளும் வளர்ந்து பெரிதாயின.

கழுகு குஞ்சுகளும் வளர்ந்து கழுகு ஆனது. ஆனால் தன்னை கழுகு என்று நினைக்காமல் கோழி என்றே நினைத்தது.

ஒரு நாள் எல்லாக் கோழிகளும் குப்பை மேட்டில் மேய்ந்து கொண்டிருந்த்ன. மேகங்கள் இல்லாத நீல வானத்தில் வெகு உயரத்தில் ஒரு பறவை இறக்கைகளை லாவகமாக கன கம்பீரமாக தரையைப் பார்த்தபடி பறந்துக் கொண்டிருந்தது. இதை கவனித்த இந்த கழுகுக்கோழி "அடடா...! என்ன அழகான கம்பீரமான பறவை!

மேலே பார் என்றது. பக்கத்தில் இருந்த கோழி, அதன் பெயர் கழுகு! பறவைகளின் ராஜா! அது போல் பறக்க ஆசைப்படாதே! ஒரு நாளும் பறக்க முடியாது... என்றது கேலியாக

தான் யார் என்பதை உணராது தன் பிறவியையே மறந்து போன இந்த கழுகுகோழி கப்சிப் என பேசாமல் இருந்துக்கொண்டது. பின் அது ரொம்ப நாள் வரையிலும் மற்றக் கோழிகளை போலவே இருந்து கடைசியில் இறந்தது.

தன்னைப் பற்றி அது உணர்ந்து இருக்குமானால், அதுவும் மற்ற கழுகுகளைப் போல வானத்தில்,உயரத்தில் பறவைகளின் ராஜாவாக பறந்திருக்கலாம்.
மனிதர்களிலும் ரொம்பப்பேர் இப்படித்தான் தன் திறமை உணராது சாதாரண

மனிதர்களாகவே வாழ்ந்து தனக்கும், மற்றவர்களுக்கும் உபயோகமில்லாமல்

வாழ்ந்து மறைகிறார்கள்....


செ.சத்யா செந்தில்,
தமிழ் முதலாம் ஆண்டு.
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (4-Mar-12, 11:31 am)
பார்வை : 672

மேலே