பேச விடுங்களேன்

கௌதம் வழக்கமாக 5 மணிக்கு கூடைப்பந்து பயிற்ச்சி முடித்து வருவான்.

இன்று வியர்வை துடைத்து,முகம் கழுவுகையில்,சிறிய முள்ளும் பெரிய முள்ளும் சேர்ந்து கடிகாரத்தை சரிபாதியாகப் பிளந்திருந்தது.

ஒரு மணி நேரம் தாமதம்.

அவசர அவசரமாய் கைப்பேசி எடுத்து பார்த்தான்.
5 தவறவிட்ட அழைப்புகள்.

உடைமாற்றி மறுபடி அழைக்கலாம் என்று எண்ணிய வேளையில்,
"அழைப்பாயா அழைப்பாயா"
அவன் அழைக்க விழையும் திவ்யா அழைத்தாள்.
தொடுதிரையில் அவன் கைவிரல் அலையாய் கடக்க,
தொடங்கியது அவளின் கோப அலைகள்.

'எத்தனை வாட்டி call பண்றது?
ஏன் எடுக்கவே இல்ல?'

'அது வந்து....'

'பேசாத.அவ்ளோதான் இல்ல.என்ன நீ கண்டுக்குரதே இல்ல வர வர.ரொம்ப மாறிட்ட கௌதம் நீ.

‘இல்ல திவ்யா அது ……’

‘என் மேல வெச்சிருந்த லவ் குறைஞ்சுடுச்சு.நான் உனக்கு இம்சை மாதிரி தெரிய ஆரமிச்சுட்டன்ல. சே.இனி உனக்கு call பண்ணவே மாட்டன்.bye'

'திவ்யா திவ்யா...'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மறுபடி அழைக்க முயற்ச்சித்தான்.
தொடர்பு கொண்ட எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

நூறு ரூபாய் அபராதம் தவிர்க்க கடனே என தலைக்கவசம் மாட்டி வண்டியைக் கிளப்ப,

"ஏ ஜிம்பா ஜிஜக்கு ஜிம்பா"
டி.ஆரின் ஆப்பிரிக்க பாடல் ஆர்பரிக்கத் தொடங்கியது அவன் அலைபேசி.

'மச்சான் படத்துக்கு நேரம் ஆச்சுடா.எங்க இருக்க? சீக்கிரம் வா.வரும் போது உன் ஏடிம் கார்டு மறந்துடாதடா.நைட்டு உன் .நீ commit ஆகி 1 வருஷம் ஆச்சுல'

'இல்லடா அது வந்து....'

'மச்சான் 2 ரூபா தான் இருக்கு போன்ல.நீ தியேட்டர் வாசல் வந்துட்டு கால் பண்ணு.bye '

'டேய் டேய் டேய்.....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'உன் போன்ல என்னைக்குடா 2 ரூபாய்க்கு மேல இருந்திருக்கு',
முனங்கியவாறே புறப்பட்டான்.

திரையரங்க வாசல் நெருங்குகையில்,
"ஓட ஓட ஓட தூரம் குறையல"
'கோச்' என மிண்ணியது அலைபேசி திரை.

'கௌதம் நாளைல இருந்து தினமும் 6.30 வரை எல்லாரும் இருந்து விளையாடனும்.
மத்தவங்க கிட்டயும் சொல்லிடு'

'சார்,அது வந்து,...'

'நீ தான் பொறுப்பான பையன்.மறக்காம எல்லார் கிட்டயும் சொல்லிடு.bye '

'சார் சார் சார்....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'சே.இந்த போன்ல எதுக்குடா மைக் இருக்கு.எவனாச்சும் அடுத்தவன் பேசுறத காது கொடுத்து கேக்குறானா?அறிவே இல்லாம போன் பேசுறாங்க.'

தனக்குள் புலம்பியவாறு நண்பனைத்தேட,

"காலையில் தினமும் கண் விழித்தால்",அவன் அலைபேசி ஒலித்தது.

'அம்மா நான் friend கூட படத்துக்கு போறன்.நைட்டு சாப்பாடு வேண்டாம்.bye '

'டேய் கௌதம் ஒரு நிமிஷம் டா....'

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'நான் சொல்றத எங்கயாது கவனிக்குறானா.போன்ல பேசுற அறிவே இல்ல.சே.'

அவன் அம்மா புலம்பிக்கொண்டே,கௌதம் அப்பாவுக்கு போன் செய்தாள்.

'வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வந்துருங்க.நாதஸ்வரம் ஆரமிக்கபோகுது.வெச்சுடறன்'

அவர் பதில் சொல்வதற்குள்,

பீப் பீப் பீப்....அழைப்பு துண்டிக்கப்பட்டது.

எழுதியவர் : ..............கந்தசுவாமி............ (27-Mar-12, 7:10 pm)
பார்வை : 614

மேலே