பரிசு பெறும் கவிதை
அம்மா பற்றியோ, ஆயா பற்றியோ,
குழந்தை பற்றியோ ,குப்பைத் தொட்டி பற்றியோ,
எழுதினால் பரிசு நிச்சயம்.
பரிசு பெறும் கவிதை யாவும் உயர்ந்ததல்ல
பெறாத கவிதையெல்லாம் தாழ்ந்ததும் அல்ல,
பரிசுக்காக பாட்டெழுதும் பானபத்திரர்களை
நான் இங்கு சேர்க்கவில்லை.
நல்ல கருத்தைச்சொல்லாத வரிகள்
உளறல்களாய் முடியும்.
வார்த்தைகள் தாண்டி நிலைத்து நிற்பவை
சிறந்த கவிதை.