ஆசிரம் ஆ...சிரமமானதே!

எல்லாம் வல்ல
இறைவன் பெயரில்
ஒரு ஆசிரம் அமைத்தேன்

நாட்டுக்கு நல்லது செய்ய
காட்டுக்குள் வைத்தேன்
புறம்போக்கு இடம் என்று
பறித்துக்கொண்டது அரசு.

பக்தர்களுக்கு பரவசம் காட்ட
புலித்தோல் மீது அமர்ந்தேன்
வன இலாக்காவினர்
வலைவீசி தேடினார்கள்!

ஆசி வழங்கினேன்
அள்ளிதந்தார்கள் தட்சணை
வந்தார்கள் துள்ளிக்குதித்து
வருமான அதிகாரிகள்!.

நடிகையுடன் சேர்ந்து
விளம்பரம் தேடினேன்
அந்தரங்க காட்சியும்
தொலைக்காட்சியில் வந்ததே!

எல்லாம் வல்ல
இறைவன் பெயரில்
ஒரு ஆசிரம் அமைத்தேன்.
ஆசிரம் ஆ...சிரமமானதே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (1-Apr-12, 8:27 pm)
பார்வை : 428

சிறந்த நகைச்சுவைகள்

மேலே