ராமர் பாலம்
காணமல்போன
தனுஷ்கோடி கடலுக்குள்
கடல்நண்டுக்கள் கூட்டம்
இரைதேடி அலைந்தன
அதிலொரு நாட்டமை நண்டு
திடீரென்று கத்தியது-
“அந்த பவளப்பாறை அருகே
போகாதீர்கள் யாரும்
அது ராமர் பாலமாம்
உங்களால் சேதாரமானால்
நீங்களும் சேதாரமாகிவிடுவீர்கள்”
எல்லா நண்டுகளும்
“ராமா ராமா” என்று
கன்னத்தில் போட்டுக்கொண்டன.