ராமர் பாலம்

காணமல்போன
தனுஷ்கோடி கடலுக்குள்
கடல்நண்டுக்கள் கூட்டம்
இரைதேடி அலைந்தன

அதிலொரு நாட்டமை நண்டு
திடீரென்று கத்தியது-
“அந்த பவளப்பாறை அருகே
போகாதீர்கள் யாரும்
அது ராமர் பாலமாம்
உங்களால் சேதாரமானால்
நீங்களும் சேதாரமாகிவிடுவீர்கள்”

எல்லா நண்டுகளும்
“ராமா ராமா” என்று
கன்னத்தில் போட்டுக்கொண்டன.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (6-Apr-12, 9:31 pm)
பார்வை : 400

சிறந்த நகைச்சுவைகள்

மேலே