அலை சித்திரங்கள்

நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான்
போகிறது வழக்கம்போல்,
புரியாமல் மௌனமாய்
பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்
ஒவ்வொரு முறையும்

வாழ்க்கை சித்தரத்தில்
எத்தனை மாயக்கோடுகள்

தொடக்ககோடும் முழுமைபெற்ற
கடைசிகோடும் மறந்துப்போய்
மௌனமாய் சிரிக்கும் ஓவியம்

நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது
என்னுள் இருக்கும் அகங்காரத்தை
மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன்

எழுதியவர் : (30-Jan-10, 7:43 pm)
பார்வை : 1422

மேலே