போ நீ போ....!

இளம் பிறை போலே வந்தவள் நீதானே..?
என் இதயம் இரண்டாய் பிளந்தவள் நீதானே..?
இதுதான் காதல் என சொன்னவள் நீதானே..?
இனிக்கும் இதழில் இரண்டற கலந்தவள் நீதானே..?

கனவிலும் வாழ வைத்தவள் நீதானே...? - எனை
கைகோர்த்து நடைபழகி நனைத்தவள் நீதானே...?
குடைக்குள்ளே நிழலையும்,
மழைத்துளியில் சுடரையும்
காட்டியதும் நீதானே...?

நினைவுகள் சுவையாக செய்தவள் நீதானே...?
நெஞ்சிலே ஒரு கூட்டை வளர்த்தவள் நீதானே...?
ஏதேதோ என் இதய சிலிர்ப்புகள் நீதானே...?
வாழ்விலே வாசனை சேர்த்தவள் நீதானே..?

இன்று மாலை அதனை சொன்னதும் நீதானே...?
அத்தோடு என் வாழ்வை நிறுத்தியதும் நீதானே..?
அகமதிலே அந்நியாச வேரருத்தவள் நீதானே..?

" என்னை மன்னிச்சிடு, எனக்கு கல்யாணம்..! "
அடிக்கொடிட்டு இதனை சொன்னவள் நீதானே..?

வேண்டாம் பெண்ணே இதோடு நிறுத்திவிடு,
மறுபடியும் முன்னே வந்து
" பத்திரிகை நீட்டிவிடாதே! "
என்னை விட்டு போ நீ போ...!!!

எழுதியவர் : கவி மணி (18-Apr-12, 8:11 pm)
சேர்த்தது : Kavi MANI
பார்வை : 456

மேலே