மயங்கி விழுந்தார் மந்திரி.
சாலையின் இருபுறமும்
நட்டநடுவிலும்
வரும் வழியெங்கும்
வாழ்த்துப் பேனர்கள்....
‘வாழும் தெய்வமே! எங்கள் இதயமே!
எங்கள் உயிரே! நீவீர் வாழ்க
நூறு ஆண்டுகள் நீடூழி வாழ்க!’
எழுதப்பட்டவைகள் ஏராளம்
தொண்டரின் மகள்
பூப்பெய்திய காரிகைக்கு
வாழ்த்து சொல்ல
வருகிறார் மந்திரி.
மந்திரிவரும் மண்டபம் வாசலில்
மாபெரும் தொண்டர்கள் கூட்டம்
மந்திரியும் வந்துவிட்டார்
‘பத்தாயிரம் சரவெடி’
பட....பட...னு வெடித்தது
எழுந்தது கரும்புகை
காரிலிருந்து இறங்கிய மந்திரியோ
கரும்புகைமூட்டத்தில் மாட்டிக்கொண்டார்.
மந்திரியும் மயங்கி விழுந்தார்.
அவருக்கு ஆஸ்த்மா இருக்கு.
தொண்டர்களுக்கு தெரியாது.