பரதேசிகளின் தங்க மகுடம்

ஆதினம்
இது 2500 ஆண்டு பழமையாம்!

சில தினங்களா
இதன் மானம் கப்பல் ஏறியதாம்!

பெரிய ஆதினம்
இளைய ஆதினத்தின்
விசிடிங் கார்டாம் !

இவர்
ஒரு சிவனின் பக்தர்

இவர் ஒரு ஆன்மிகவாதி

இவர்
ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்!

இவர்
இந்து சமைய நெறிகளை கொண்டவர்!

என்று

இளையவரக்கு
பெரிய ஆதினம்
கொள்கை பரப்பிய விஷயங்கள்!

பாவம்
பெரிய ஆதினம் ஒன்றை மறந்துவிட்டார்!

இளையவரக்கு
ரஞ்சிதம் பூ மிகவும் பிடிக்கும் என்று!

இளையவர்
பெரிய ஆதினத்தின் ஒன்றை கேட்டார்!

நான் மகுடம் சூட வேண்டுமென்றால்
மொட்டை அடிக்க வேண்டுமா என்று !

அதற்க்கு பெரிய ஆதினத்தின் பதில்
உங்களுடைய trade மார்கே
உங்களுடைய தலை முடித்தான்!

பெரிய ஆதினம்
இளையவரின் மற்றொரு trade மார்க்கை
மறந்து விட்டார்!

நயவஞ்சகர்கலான

இவர்களெல்லாம்

எல்லாம்

துறந்த துறவிகளாம்!

ஆனால் தங்க மணி மகுடமாம்
இருவருக்கும்!

இவர்களிடத்தில்
இருக்கும் பணத்திற்கு!

அந்த
சிவனே வாய் பிளப்பாராம் !

பெரிய
ஆதினத்தின் மற்றும் ஒரு அறிவிப்பு!

இளையவர்
இந்த ஆதினத்தில் சேர்ந்ததால்

இனி
அவதார புருசனான இளையவர்!

எந்த நீதி மன்றத்துக்கும் செல்ல வேண்டாமா!

பெரிய ஆதினம்
என்ன
உச்ச நீதிமன்றத்தின் தலைவரா!


இவர்கள் என்ன
இறைவனின் செயலாளர்களா!

இவர்கள் நம்மிடையே
ஆன்மிக என்ற போர்வை கொண்டு
வளர்ந்து விட்ட விஷ காளான்!

மதி கெட்டு
அவர்களை நாடி போகும் மக்களே!

அவர்கள் உங்கள் அறிவு பசியை குடிக்க வந்திருக்கும் அட்டை என்று உனக்கு புரியவில்லையா!

ஒ இறைவா
இந்த கயவர்களின் நடிப்பிற்கு அளவே இல்லையா ?

எழுதியவர் : THILAKRAJ (9-May-12, 12:06 am)
பார்வை : 529

மேலே