நிஜமான கனவு

உன்னை
எங்கேயோ
எப்போதோ
பார்த்த ஞாபகம் !

என் வீட்டிலா !
உன் வீட்டிலா!
கோவிலிலா !

இல்லை
திருவிழாவிலா !
தெரியவில்லை

பின் எங்கே பார்த்தேன் ?
இப்பொழுதுதான் எனக்கு
ஞாபகம் வருகிறது
என் கனவில் தானோ!

உன்னை
என் எதிரில் கண்டதும்
என்னையே மறந்தேன் !

ஏன்?
உன்னுள் நானிருக்கேனே !
என்னுள் காதலை உருவெடுத்து
மறைந்து விட்டாயே !
...........
அது சரி !

அது யார்?

உங்க அப்பன் !

நீ யாரை எங்க பார்த்த !

யாரோ எழுப்பிய சப்தம் !
எழுந்து பார்த்த போது...

ஒ ! என் அண்ணனா !
நான் கண்டதெல்லாம்
கனவில் தானா!

எழுதியவர் : செயா ரெத்தினம் (15-May-12, 7:05 am)
பார்வை : 274

மேலே