ஈரநெஞ்சம்...

ஈர நெஞ்சம்- சேவைகள்" (38 /2012 - 11 .07 .2012 யின் தொடர்ச்சி) ******கடந்த இரண்டு நாட்களாக திருமதி. கண்ணம்மாள் அவர்கள், கோவையில் உள்ள அன்னை தெரேசா காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்கள். அவரை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்த பொழுது தெரியவந்தது என்னவென்றால், அவர் எதையோ பறிகொடுத்து இருப்பது போல இருந்தார்கள். (திருமதி கண்ணம்மாள் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே ). இதற்கிடையில், 12/07/12 மதியம் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக திருமதி. கண்ணம்மாள் அவர்களின் நிலைமை பரிதாபமாக இருப்பதை அறிந்து அன்னை தெரேசா காப்பகத்தின் நிர்வாகத்தின் அனுமதியுடன் அவர்களை வாடகை காரின் மூலமாக அழைத்துக்கொண்டு சின்னதடாகம் சென்று பார்க்கலாம். இவரது உறவினர்கள் பற்றிய தகவல் கிடைக்குமா என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மதியம் மூன்று மணிக்கு மேற்கொள்ளப்பட்ட உறவினர் தேடும் பணி இரவு எட்டு மணிக்கு தடாகம் பகுதியில் ஒவ்வொரு வீடாக ஒவ்வொருவரையும் அணுகி புகைப்படத்தையும் அவரையும் காட்டி இவரை தெரிகிறதா? இவரது உறவினர்கள் இந்த பகுதியில் இருக்கின்றார்களா என்பதை கேட்டுக்கொண்டு இருக்க ஒரு பழம் வியாபாரம் செய்யும் ஒருவர் இவரை தெரியும் அவரது வீட்டுக்கு எங்களையும், அவரையும் அழைத்துக்கொண்டு சென்றார். "ஈர நெஞ்சம்" எடுத்த முயற்ச்சி வெற்றியை நோக்கி சென்றதை மகிழ்தோம். வீட்டை காட்டியதும் அதுவரை மௌனமாக இருந்த அவர், ஒரு பெண்மணி வீட்டில் இருந்து வருவதை கண்டதும் பாதி முகம் மலர்தது. அந்த பெண்மணி திருமதி. கண்ணம்மாள் அவர்களின் மகள் சாந்தாமணி. சாந்தாமணி அவர்கள் "அம்மா எங்கம்மா போன மூணு நாளா என அழுது கொண்டே ஓடி வந்து அவரை அழைத்து வீட்டினுள் சென்றார். அவரின், அப்போதுதான் மனதார மகிழ்ச்சியில் புன்னகைத்ததை பார்க்க முடிந்தது. " ஈர நெஞ்சம்" அமைப்பிடம் திருமதி. கண்ணம்மாள் அவர்களின் உறவினர்கள் இவரை காணமல் போனதை பற்றி கூறும் பொது, அவர் எப்படி போனார் என்று தெரியவில்லை நாங்கள் மூன்று நாட்களாக தேடி வருகிறோம் காவல் நிலையத்திற்கு தகவல் நாளை காலை கொடுக்க முடிவு செய்து இருந்தோம். எல்லா இடமும் குறிப்பாக அரசு மருத்துவமனை , மற்றும் கோவையில் உள்ள முக்கியமான இடங்கள் என அனைத்து இடங்களிலும் தேடிவிட்டோம். இவர் கோவையில் உள்ள சரவணம்பட்டிக்கு இங்கு இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் இருக்கும் அவளவு தூரம் எப்படி சென்று இருப்பார் என தெரியவில்லை. இவரை, (திருமதி. கண்ணம்மாள்) கண்டு பிடித்து எங்களிடம் குடுத்த " ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள். திருமதி.கண்ணம்மாள் அவர்களின் மருமகன், திரு. ஆறுமுகம், மகள். சாந்தாமணி, பேத்தி. சிலோக்ஷனா, பேத்தியின் கணவர் திரு.சுப்பிரமணி, திருமதி. கண்ணம்மாள் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த இருக்க அந்த மகிழ்ச்சிக்கு காரணம் "ஈர நெஞ்சம்" என்ற மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பு திருமதி. கண்ணம்மாள் அவர்களின் குடும்பத்தை விட்டு விடை பெற்றது. எங்களது சேவையை காவல் துறையும் பாராட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெற்ற சந்தோசத்தை இந்த கானொளியில் காணலாம்.



http://youtu.be/dmWUG0wmtdU

எழுதியவர் : மகேந்திரன் ~ஈரநெஞ்சம் (22-Jul-12, 6:29 pm)
சேர்த்தது : மகி
பார்வை : 311

சிறந்த கட்டுரைகள்

மேலே