பிரிக்க வேண்டிய நட்பு .........

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே இவனை நன்றாக தெரியும்,

இவண் மிகவும் மோசமானவன் என்றும் பொல்லாதவன் என்றும் பல பேர் வாழ்க்கையை அழித்தவன் என்றும் எனக்கு தெரியும்,

இவனிடம் பழக்கம் வைத்து கொள்ளாதிர்கள் என்று பலரிடம் சொல்லி இருக்கிறேன்,

இவனிடம் பழக்கம் வைத்து கொண்டு இருந்தவர்களிடம் இவண் நட்பை உடனடியாக துண்டிக்கும்மாறு மன்றாடி கேட்டுக்கொண்டேன்,

சிலர் அவன் நட்பை துண்டித்தனர் பலர் அவன் நட்பை தொடர்ந்தனர்,

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவனிடம் நான் நட்பு வைத்து கொள்ளகுடேதேன்று உறுதியாக இருந்தேன்,

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவனுடனான என் நட்பு வளர தொடக்கியது அவன் இல்லாமல் நான் இல்லை என்ற நிலைமைக்கு நான் தள்ள பட்டேன் ,

உணவு இல்லாமல் குட நான் இருந்து விடுவேன் ஆனால் அவன் இல்லாமல் நான் இருந்ததில்லை ,

பல வருடங்கள் எங்கள் நட்பு தொடர்ந்தது,


நான் சொல்லி அவன் நட்பை விட்ட என் நண்பர்கள் சொன்னார்கள் அவனிடம் இருந்து எங்களை பிரித்து விட்டு நீ சேர்ந்து கொண்டாயே இது நல்லதுக்கு இல்லை நண்பா என்று என்னை அறிவுரிதனர் ,

இருந்தும் நான் கேட்க்க வில்லை எல்லோரும் அவனை தவறாக புரிந்து கொண்டுருந்தார்கள் அவன் என் நண்பர்கள் யாருக்கும் கொடுக்காத மிக பெரிய பரிசு ஒன்று கொடுத்தான்! ,

ஒரு பரிசுக்கே வியப்பில் இருந்தேன் நான் அந்த வியப்பில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு பரிசும் கொடுத்தான்.......................!!!!
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
முதல் பரிசு eரத்த புற்று நோய்
இரண்டவது நுரையீரல் புற்று நோய்
அவன் வேறு யாரும் இல்லை
புகைஇலை(cigarettes )

நண்பர்களே இவனிடம் நீங்கள் நட்பு வைத்து இருந்தால் தயவு செய்து அவன் நட்பை துண்டித்து விடுங்கள் please,

புகையிலை புற்று நோயை உண்டாக்கும் .











அது தான்

எழுதியவர் : கலிமுல்லா (24-Jul-12, 8:11 pm)
பார்வை : 540

மேலே