கடவுள் ஒரு கல் - 2

பிரபஞ்சம் இப்படியாக ப்ரோடான், எலேக்ட்ரோன், நியுட்ரான் இவைகளால் நிரப்பப்பட்டு, பின் சிலபல, ஒழுங்கினுள் வந்து அணுவாகி, பின் இரசாயன மூலங்களாகின்றன.
இறைத்தன்மையிலிருந்து ( அர்த்தநாரீஸ்வரர் ) பிரிந்தவற்றுள் அணுவாக மாற்றம்பெறாமல் தனித்தனியே பறந்து கிடக்கும் ஏலேக்ட்ரோனும் ப்ரோடானும் மட்டுமே உயிர் உற்பத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன.
எலேக்ட்ரோன் -ve காந்தத்துகள். ஆண் சக்தி, சிவம். துடிப்புடன் விண்ணில் பரவிக்கிடப்பது. இது தன்னைப் பாதிக்கும் வெளிக்காந்த சக்தியினைக் கொண்டு அணுக்களால் ஒரு கட்டுமானம் அமைக்கிறது. இதுவே X க்ரோமோசோம்.
விந்துசக்தி, X க்ரோமோசோம் ஒன்றையும் Y க்ரோமோசோம் ஒன்றையும் தாங்கிநிற்கிறது.
ப்ரோடான் +ve காந்தத்துகள். பெண் சக்தி. சவமாக கிடப்பது. அணுக்களின் கட்டுமானத்தால் Y க்ரோமோசோம் ஆகிறது.
நாதசக்தி, 2 - Y க்ரோமோசோம்களை தாங்கிநிற்கிறது.
விண்ணில் மிதந்து கிடக்கும் ஒரேயொரு தனி எலேக்ட்ரோன் தன்னைத்தானே அணுக்களாலும் இராசாயன மூலங்களாலும் இறைக்காந்த உதவியுடன் உரு அமையபெற்று ஒரு ஆணுயிராய் அவதரிக்கிறது.
அதுபோல ப்ரோட்டன்கள் ஒரு பெண்ணுயிராய் அவதரிக்கிறது.
( விண்ணில் கோடானுகோடி பிரிந்த எல்க்ட்ரோனும் ப்ரோடோனும் பரவி இருக்கின்றன.)
ஆதியில் பிரியும்பொழுது உண்டான எல்க்ட்ரோனும், ப்ரோடோனும் சரியாக ஒன்றுடன் ஒன்று இணையும்போழுதே ஜென்ம முடிவு நிகழ்கிறது.
அதுவே நம்மின் உண்மையான பாதி.
மற்ற பாதிகளுடன் இணையும்பொழுது பலபல ஜென்மங்கள் உருவாகி ஈடேருகின்றன.
உண்மையான நம் பாதியைக் கண்டுகொண்டு ஆத்மார்த்தமாக இணையும்பொழுது ஜென்மமுடிவு ஏற்பட்டு, இறைவனுடன் ஐக்கியமாகிவிடுகிறோம்.
இதுவே மறுபடியும் இறைவனை ஐக்கியமாகிக் கலக்கமுடியும் வரம்.

ஒரு ஆண்மகனிடம் அணுக்களின் மூலங்களைத் தவிர ஒரேயொரு ஏலேக்ட்ரோனை மட்டுமே அதிகமாகப் பெற்றிருப்பான்.
அதுபோல பெண்ணுக்கு ஒரேயொரு ப்ரோடான்.
வேறெந்த வகையிலும் எந்த ஒரு வித்தியாசமும் உடல் கட்டமைப்பில் கிடையாது.
எல்லா வகை உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.

எழுதியவர் : jujuma (14-Aug-12, 5:07 pm)
பார்வை : 245

சிறந்த கட்டுரைகள்

மேலே