கடவுள் ஒரு கல் - 3

இப்படியாக ஒரேயொரு ஏலக்ட்ரோனைக் கொண்டு அமைக்கப்பட்ட அணு - மூலங்களின் கட்டிடம், ஆண் என்று கொள்ளப்பட்டது. ப்ரோடான் பெண் எனக் கொள்ளப்பட்டது.
23 சுரப்பிகளின் மூலமாக அவன் முழுமையடைந்தான். அவனுக்குள் சேமிக்கப்பட்ட தனித்தனி எலக்ட்ரோன்களை ஒவ்வொன்றாக அவனின் 23 குரோமோசோம்களால் அதனுள் நிரப்பி சிறு அணு-மூலக்கூறு, அதாவது விந்துக்களைக் கோடிக்கணக்கில் உருவாக்கத் துவங்கினான்.
அதுபோல பெண், ப்ரோடான்ஐக் கொண்டு முட்டைகளை உருவாக்கினாள்.
இப்பொழுது ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 23 குரோமோசோம்கள் என்பது, 23 சுரப்பிகள். அவைதான் மனிதனின் அங்கங்கள் எல்லாம் எப்படியெப்படி அமையவேண்டும், என்பதினை சுருக்கி முடிந்துவைத்து முடிவு செய்கின்றன. வழிநடத்துகின்றன.
இவற்றில் 7 சுரப்பிகள் முக்கியமானவை. 7 சக்கராக்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றில் சகஸ்ராரம், ஆக்னை, விசுத்தி, இவை தெய்வ சக்ராக்கள்.
அனாகாதா சக்ரா மட்டும் ஆவிநிலை.
மற்ற மணிப்புரா, ஸ்வாதிஷ்டானம், மூலாதாரம் இவைகள் மனித உடல் சக்ராக்கள்.
பிறக்கும் நிலையில் சகஸ்ராரம் சுரப்பி நிறைந்திருக்கும். அது கிருஷ்ணாவின் சக்ரா.
குழந்தை வளர்ந்து ஒவ்வொரு சுரப்பியாக நிரம்பி முடிந்து, மூலாதாரம் நிரம்பும்போழுது மனிதன் வயதுக்குவந்து முழுமையாகி தன்னின் வடிவமாக்க வல்ல விந்துவினையோ, முட்டையினையோ உற்பத்திசெய்யத் துவங்குகிறான்/ள்.
இதன்பின் பிறப்பு பற்றின அனைத்து படித்திருப்போம். சிற்றின்பம்.
இனி தியானம்,பேரின்பம் பற்றி.
விந்துக்களோ, நாதமோ மூலாதாரத்தில் ( ஒரு கலவிக்குப்பின் ) முழுமையாய் நிரம்ப ஒரு மண்டலம், 48 நாட்கள் ஆகின்றன. இதுதான் தியானத்திற்கு மிகமுக்கியம். அதாவது நம்மின் எல்லா 23 சுரப்பிகளும் அதனதன் திரவங்களால் இப்பொழுது இந்த 48 நாட்களில் நிரப்பப்பட்டிருக்கும். ஆன்மா என்கிற ஆரா பெரிதாகியிருக்கும்.
இப்பொழுது தியானங்கள் பலவகைகளில் உங்களில் நிகழ்ந்துவிடலாம்.
நல்ல இசையை கேட்கும்பொழுது, இயற்கை அழகை ரசிக்கும்போழுது, விளையாடும்பொழுது, கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும்பொழுது ஒரு நடனத்தில் இப்படி, ஐம்புலன்களில் ஏதாவதொன்றில் நீங்கள் ஐக்கியம் ஆகிவிடும்பொழுது அது நிகழலாம்.
வெள்ளை ரத்தம் அழிவில்லாததால் அது உங்களின் ஆன்ம எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும்.
உங்கள் பாதியைக் கண்டுகொண்ட, அதாவது ஆதியில் நீங்கள் இறைச்சக்தியிலிருந்து ஏலேக்ட்ரோனாகவும் ப்ரோடோனாகவும் பிரியும்பொழுது உங்களிலிருந்து பிரிந்துசென்ற
காதலனை ( அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஆணை ) உங்களருகில் இருப்பதைப் போல கற்பனை செய்துகொள்ளுங்கள். அவன் உங்களுடன் ஊடலில், உடலுறவில் திளைத்திருப்பதாய் நினைத்துக்கொள்ளுங்கள். உடலின் அத்தனை திசுக்களும் அசைவற்று இறந்தநிலையில் கிடக்கட்டும். இப்பொழுது உங்களின் உடலிலுள்ள அணுக்களத்தனையும் இன்ப அதிர்வுகளால் துடிக்கும். அதை உடல் முழுவதும் பரவவிட்டு அனுபவிக்கவிடுங்கள். மெதுவாக கற்பனையில் உங்கள் காதலனுடன் அவன்மேலேறி அவன் ஆன்மாவுடன் உங்கள் ஆன்மா ஒருமித்துக் கலப்பதுபோல் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களின் ப்ரோடோனின் ஆன்மா, காதலனின் ஏலேக்ட்ரோனின் ஆன்மாவில் ஐக்கியமாகி, ஆதிநிலையின் அளவில்லா இன்பம் உங்கள்மீது பரவிநிற்கும். முடிவில்லாத அந்த இன்பத்தை அசையாமல் அள்ளியள்ளிப் பருகுங்கள். இதுதான் இறைவனுடன் கலந்துகிடக்க இருக்கும் முயற்சி. நம் வாழ்வின் இலக்கு, லட்சியம், குறிக்கோள் எல்லாம்.
தியானத்தை விளக்க எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே இது. முழுமையாய் உணரவைக்க முயன்றிருக்கிறேன். முடியவில்லை. திருப்தியுமில்லை.

எழுதியவர் : jujuma (16-Aug-12, 1:55 pm)
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே