!!!===((( மூன்றாவது கண் ! - இடி - 16 )))===!!!

உலக வங்கிகளிலும், இந்தியாவிலும் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் மொத்த தொகை 400 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது, அப்பா திருட்டு பணம் எவ்வளவு பார்த்தீர்களா, இதில் சுவிஸ் வங்கியில் மட்டும் 70 லட்சம் கோடி இருக்கிறதாம், நமது மொத்த மக்கள் தொகையே 120 கோடி மட்டுமே ஆனால் கருப்பு பணமோ 400 லட்சம் கோடி என்று கணக்குகள் கூறுகின்றன, அந்த 400 லட்சம் கோடியையும் கையகபடுத்தி ஒவ்வொரு குடிமகனுக்கு தலா இரண்டு கோடி கொடுத்தாலும்கூட இங்கே யார் ஏழை...? நீயா? நானா?

இந்த கருப்பு பணம் மொத்தமும் நமது நாட்டில் இருந்தால் நம் நாடு பணக்கார நாடுகளிலேயே முதல் நாடாகிவிடுமாம், நாம் எதற்கும் வரியே கட்ட தேவை இல்லையாம், பொருளாதாரத்தில் நம் நாடு மிக ஏற்றத்திற்கு போய்விடுமாம், அமெரிக்காவே நம்மிடம் தோற்று போய்விடுமாம், அட இது கட்டுக்கதை இல்லைங்க நிஜமாத்தான் சொல்றாங்க.

சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய கருப்பு பணம்;.
============================================

சுவிஸ் வங்கியில் மட்டும் இந்திய கருப்பு பணம் 70 லட்சம் கோடி இருப்பதாக கூறப்படுகிறது.

அ) இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கிக்கு ஆண்டு ஒன்றுக்கு இந்திய கருப்பு பணம் 4 லட்சம் கோடி செல்கிறதாம், இந்த பணத்தை இந்திய குடி மக்களுக்கு தலா 60 , 000 ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு தரலாமாம்.

ஆ) இந்தியாவின் அணைத்து ஊர்களுக்கும் நான்குவழி சாலை எற்படுத்தலாமாம், 60 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தரலாமாம்.

இ) இந்தியா அயல்நாட்டிடம் வாங்கி உள்ள மொத்த கடனைவிட சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தின் மதிப்பு 13 மடங்கு அதிகமாம்.

ஈ) சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பண மதிப்பின் வட்டி மட்டுமே நமது நாட்டின் வருடா வருட பட்ஜெட்டை ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது.

உ) சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு இந்தியாவின் அடுத்த 30 ஆண்டுக்கான பட்ஜெட்டையும் போட்டுவிடலாம் என்கிறார்கள், இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா??? சுவிஸ் வங்கியில் மட்டுமே இவ்வளவு பணம் என்றால் உலகில் உள்ள மற்ற 70 வங்கிகளில் இன்னும் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும்???

உலகில் உள்ள 400 லட்சம் கோடி கருப்பு பணத்தையும் நம் நாட்டிற்கு கொண்டு வந்து அதை ஏழை எளியவர்களுக்கெல்லாம் கொடுக்க தேவை இல்லை, அதன் உரிமையாளர்கள் சொந்த நாட்டில் அதை முறையாக பயன்படுத்தினாலே போதும் இந்தியா வல்லரசாகிவிடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்நாட்டு செல்வத்தை அயல்நாட்டில் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும், இவ்வளவு பணம் முடங்கி கிடக்க இதை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு பொருட்களின் விலையேற்றத்தையும், வரி விதிப்பையும் திணித்து மக்களை இம்சித்து வருவதுதான் கொடுமை.

கருப்பு பண முதலைகளை வளரவிட்டுவிட்டு அதை கண்டுகொள்ளாமல் குடி மக்களை இம்சித்துவரும் அரசின் போக்கு மிக கண்டனத்திற்குரியது, அமெரிக்கா தங்கள் நாட்டின் கருப்பு பணத்தை மீட்டதை போல நமது நாடும் கருப்பு பணத்தை மீட்டு நம் தாயகத்திற்கு கொண்டு வர வேண்டும், இல்லையேல் நம் தாயகம் நம் கண் முன்னாலேயே தொடர்ந்து அழிவை சந்திக்கும் அவலம்தான் தொடரும்.

விழித்தெழு
விடை தேடு.....
நீயும்
இந்திய குடிமகன்தான்
உனக்கும்
உரிமை இருக்கு
இந்த அரசிடம் கேள்வி கேட்க...!!!!

====(மீண்டும் திறக்கும் மூன்றாவது கண்)====

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (22-Aug-12, 1:17 pm)
பார்வை : 311

மேலே