!!!===((( மூன்றாவது கண் ! - இடி - 17 )))===!!!

நமது நாட்டில் அளவுக்கு அதிகமாக மித மிஞ்சிய பணத்தை சம்பாதித்து, ரொக்கமாகவும், சொத்தாகவும், தங்கமாகவும் சேர்த்துகொண்டு அரசுக்கான வரியை ஏய்த்து, அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தங்களின் செல்வங்களை மறைத்து வைப்பதே கருப்பு செல்வம் அல்லது கருப்பு பணம் என்று கூறப்படுகிறது,

ஒருவருக்கு இவ்வளவுதான் சொத்து இருக்க வேண்டுமென்ற கணக்கு நமது நாட்டில் இல்லை, இன்றைய தலைமுறைகள் சோற்றுக்கே வழி இல்லாமல் திண்டாடிகொண்டு இருக்கும்பொழுது, பல தலைமுறைகளுக்கான சொத்தை சேர்த்து அரசுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருக்கிறார்கள், அவர்களின் பணம் எதற்கும் பயனற்று துருபிடித்துகொண்டு இருக்கிறது, நடைமுறை வாழ்க்கையை நடத்த முடியாமல் நாடியறுந்து கிடக்கிறோம், இப்படி இருக்கையில் ஏற்ற தாழ்வுகள் என்று சமநிலை அடைந்து சமதர்மம் மலரும்???

நமது நாட்டில் சேர்த்த பணங்களை எல்லாம் அயல்நாட்டு வங்கிகளில் மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத தேச துரோகமாகும், இந்த தேச துரோகிகளை அரசு கண்டுகொள்கிறதா??? நமது நாட்டு பணத்தை அயல்நாடுகளில் பதுக்குவது இறையாண்மைக்கு எதிரானதாகும், இந்த இறையாண்மைக்கு எதிரான செயலை அரசு எப்படி ஏற்றுகொள்ளலாம்??? நமது நாட்டில் சம்பாதித்த செல்வங்களை அயல்நாட்டில் பதுக்குவது மாபெரும் கொள்ளை குற்றமாகும் இதை கண்டிக்காமல் அரசு ஏன் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறது??? இதனால்தான் நாம் அரசின்மீது குற்றம் கூறவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

பதவியில் வருவது பெரியவிசயமல்ல அந்த பதவியை ஒழுக்கமான முறையில் பயன்படுத்தவேண்டியதே முக்கிய கடமையாகும் என்பதை ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அரசியல் தெரியாதவர்கள் எல்லாம் அரியணையில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டவேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு உண்மையான குடிமகனும் இன்று இருக்கிறான்.

நமது நாட்டில் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியதன் விளைவுதான் இங்கே மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கிறது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், நமது நாட்டுப்பணம் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்படாமல் நமது நாட்டிலேயே புழக்கத்தில் இருந்து இருக்குமாயின் இப்பொழுது இந்தியா பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இருந்து இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

நமது நாட்டு பணத்தை அடுத்த நாட்டில் பதுக்கி வைத்து அந்த நாடு பயன்படும்படி செய்யும் நம்மவர்களுக்கு எவ்வளவு தேசப்பற்று என்று பார்த்தீர்களா??? இந்த தேச துரோகிகளை நாடுகடத்தாமல் விட்டுவிட்டால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது, 65 ஆண்டுகளாக இதுமாதிரி தேசதுரோக பண முதலைகளை உருவாக்கியதுதான் நமது அரசின் சாதனைகள்.

நேற்றைக்கு வளர்ந்த சைனா வல்லரசாக ஆகிவிட்டது, என்றைக்கே வளர்ந்துபோன நமது நாடு இன்னும் வல்லரசாக முடியவில்லையே என்று எண்ணி நாமும் நமது அரசியல்வாதிகளும் வெட்கி தலைகுநிவதைத்தவிர வேறு என்ன செய்ய???

====(மீண்டும் திறக்கும் மூன்றாவது கண்)====

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (22-Aug-12, 1:25 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 253

சிறந்த கட்டுரைகள்

மேலே