அப்பா,,,

அப்பா,,,

நான் நடக்கையில்,,என் கால்கள் வலிப்பதாய்,,
நினைத்து என்னை உன் தோளில்,,
சுமந்திருக்கிறாய்,,

நான் செருப்பிட்டு பள்ளிக்கூடம் போக
நீ,,செருப்பில்லாமல்,,தேய்ந்திருக்கிறாய்,,,,

எஞ்சிய வயதில்,,
நான் பேருந்து நிலைய வெய்யிலில்,,
நிற்பதைக்கண்டு,,என்னக்காய்,,
நீ வாங்கி தந்த,,முதல் மிதி வண்டி,,,
இன்னும்,,,என் பங்களா,,,வாசலில்,,,
உன்னையே,,,நினைவு படுத்துகிறது,,,,

பள்ளி கூடம் போரப்பலேருந்து ,,,
கல்லூரி போரவர,,,,வீட்ட விட்டு
நா கடந்தா,,,பார்த்து டா தங்கம்,,,
ரோடு மேலே நடக்கறப்போ
பத்திரண்டா ராசா,,

செலவுக்கு பணம் வெச்சிருக்கியா,,,
கட சாப்பாடு கண்டபடி சாப்பிடாத,,,
அண்ணாச்சி வீட்டுல சொல்லிருக்கேன்,,
காசு கூட ஆனா பரவாயில்ல,,,
அங்கே போயி சாப்பிடு,,கண்ணா,,

இதே வாக்கியங்கள்,,,,
கண்மூடும்,,ஒவ்வொரு கணமும்,,
என் கண்களில் கண்ணீர் தொப்பல்களாய்,,,

நன்றாய் படித்து முடித்தேன்,,,
நல்ல உத்தியோகம்,,,
கை நிறைய,,சம்பளம்,,,
பை நிறைய,,,,துணிமணிகள்,,,
அன்னை இல்லாத,,,வீட்டில்,,
நீ ஒருஅன்னை என,,நினைத்து ஸ்தம்பித்து,,
பேருந்து நிலையம்,,வந்த என்னை,,
நீ ஏமாற்றி சென்ற செய்தி
என் காதில் ஏனோ,,,,
இன்னொரு இருபது மயில் தூரம்
கடக்கவே இக்கணம் என்னில் முடியவில்லையே,,,

இனி என் வாழ்க்கையை,,
நான் எப்படி கடப்பேன்,,,,
என் தோள் பற்றி நடக்கும்
தோழனாய் நீ இதுவரை,,,
இனி என் துணை ஏது,,,
நான் சாயும் உன் தோள் தான் ஏது,,,
எனக்காய் வருத்தம் கொள்ள
இனி ஒரு மனம் ஏது ,,,

என் வயது எத்தனை தள்ளி,,,போயிருந்தாலும்,,
நான் இன்னும்,,உன்னில்,,,சிறு குழந்தைதானே,,
உலகம் தெரியாத என்னை,,,உலகமாய் இருந்து,,
பொற்றி பொற்றி பாதுகாத்தாய்அரவணைத்தாய்,,,

தகப்பன் சாமி என்று
பலபேர் உன்னை சொல்ல,,
நான் கேட்டிருக்கிறேன்,,,,,
அந்தி சூழ்ந்த என் வாழ்க்கைக்கு,,
நீ இனியும் சாமியாய்,,,,தகப்பன் சாமியாய்,,,,
என் நினைவுகளில்,,தொடர்வாயா,,,,??

பக்குவபட்டுக்கொள் என்று
நீ சொன்ன பொழுதுகளில்
நான் பக்குவ பட்டிருந்தால்
உன்னை நினைக்க இந்த,,,
சந்தர்பங்கள் கூட கிடைக்காமல்,,,
போயிருக்கும்,,அல்லவா,,,

இன்று பக்குவப்படுகிறேன்
ஆம் தாயின் முகமறியாத நான்,,
இன்றும் நீ என்னோடிருப்பதாய் நினைத்து,,,
நான் பக்குவப் பட்டிருக்கிறேன் அப்பா,,,,

என்னை மகனே என்று அழைத்ததை தவிர,,,
நான் வேறு ஒரு சந்தோஷங்களையும்,,,
உன்னில் விதைக்க முடியாத பாவியானேனே,,
என்னை மன்னிப்பீர்களா,,,??

எனக்கு துணை வருவீர்களா,,,??

நான் கடக்கும்,,
கரடு முரடான பாதைகளில் புல்தரையாய்,,,
மழையிலும் வெய்யிலிலும்
ஒரு நிழல் குடையாய்,,
என்னை தொடர்வீர் என்று,,,
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்,,,
இன்று என்னோடு பேச
ஆளில்லாத இந்த தனிமையில்,,,

தந்தை தோழனே

உன்னை கொண்டு சென்ற
பாசக்கயிற்றின் விலை
நான்,,அன்றறிந்திருந்தால்,,,

உம்மை எமனிடம்,,
ஒப்படைத்திருக்க மாட்டேன்,,,
அன்றவன் என்னை வென்றுவிட்டான்,,,
விதியின் சதியால்

என்னை நீ கண்ட பிறகுதான் ,,
பெற்றெடுத்த மகராசியே,,கண்டிருப்பாள்,,,
இந்த அதிர்ஷ்டமில்லாதவனை,,,,

ஆதலால்தானோ என்னவோ
அவளும் என்னை விட்டு சென்றாள்,,

உன்னிடம் எல்லாமே இருந்தும்,,
என் ஒரு மாத சோற்று படியில்
உன் ஒரு வேளை பசி தீர்க்க,,
ஓடோடி வந்த என்னில்,,,

இடியாய் உன் மரண படுக்கை,,
நான் வாங்கி வந்த அரிசியும்
இன்று உன் வாய்க்கரிசி ஆனது,,,,

உன் கந்தல் நிறைந்த உடுப்புகளை
என் கண்ணாடி பெட்டியில்
பத்திரபடுத்துகிறேன்

உன் பிறப்பு முதல் இறப்பு வரையான
சுய சரிதையை
என் நெஞ்சில் சுமந்து பாதுகாக்கிறேன்
ஒரு சரித்திரமாய்,,,

ஆம்,,,

இன்று நீ இறந்து சென்றாலும்,,,
என்னில் என்றும்
ஒரு சரித்திர நாயகனே,,,

உங்கள் அன்பு மகன்,,,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (12-Oct-12, 2:39 am)
பார்வை : 1348

மேலே