கசாப்புடன் 'கசாப்பு' ஆகிப் போன உண்மைகள் எவை எவை..?
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்திலேயே அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது ரகசியமாக வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். கசாப்புக்கு அதிகபட்ச தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சோக சாகப்தம் ( மும்பை தாக்குதல் ) முடிவுக்கு வந்துள்ளது. மும்பை தாக்குதலில் பலியான 166 பேரின் உயிர்களை திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால் கசாப் தண்டனை மூலம் அவர்களுக்கு திருப்தி கிடைக்கலாம் என்றார்.
ஒபாமா மற்றும் புதின் தவிர அணைத்து கட்சி தலைவர்களும் கருத்துக்களை சொல்லி விட்டார்கள். அதாவது இவ்வாறு செய்தால் தான் வருங்காலத்தில் இது போன்ற தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் பயப்படுவார்கள், அஞ்சுவார்கள் என்று சொல்லி, தனது தூக்குத் தண்டனையை நியாயப்படுத்துகிறது.
தினமலர் இவ்வாறு எழுதுகிறது. 2005 - ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறி லக்சர் -இ - தொய்பா பயன்டரவாத இயக்கத்தில் சேர்ந்தான், இவனுடன் 24 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின் படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன, இவ்வாறு பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேர்களை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். என்கிறது.
மும்பை தாக்குதலுக்கு மரண தண்டனை சரியென்றே வைத்துக் கொள்வோம். லக்சர் இ தொய்பா என்ற அமைப்பு ஏன் தற்கொலைப் படைகளை கொண்டு இது போன்ற தாக்குதலை நடத்துகிறது இந்தியாவில்..? பாகிஸ்தான் துணையோடு ஏன் அவர்கள் செயல்படுகிறார்கள்..? அப்படியெனில் ஏன் பாக்குடன் நல்லுறவு வைத்து உள்ளது இந்திய அரசு..? அவ்வாறு இல்லையெனில் வேறு என்ன காரணமாக இருக்கக் கூடும்..? ஒருவேளை காஷ்மீர் சுதந்திரம் கேட்கிறார்கள் என்று வெளியே சொல்ல முடியாமல்...
எப்பொழுதுமே சதா பயங்கரவாதி தீவிரவாதி என்று சொல்லி சமாளித்து விடலாம் என்று இருக்குமோ..?
166 உயிர்களை திரும்ப கொண்டுவர முடியாது. ஆனால் அந்த உயிர்களுக்கு திருப்தி அளிக்க முடியும்..? அப்படியெனில் சட்டம், நீதி, உரிமைகள், மக்களுக்கு தெரிவித்தல், குடிமகன் உரிமை இவையெல்லாம் தேவையில்லையா..?
மராட்டியத்தில் பால் தாக்கரே மறைவு எதிர்க்கட்சியான இந்துத்துவ கட்சிகளுக்கு பெரிய ஆதரவை வழங்கிவிடும் என்ற நிலையில் இந்த தூக்கு நடந்திருக்குமா..?
ஒருவேளை கசாப்புக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என்று சொன்ன சில நாட்களில், அவர் மருத்துவ பலனின்றி இறந்து போக, இறந்து போன விஷத்தை வெளியே சொல்ல முடியாமல் ரகசியமாக தூக்கில் தொங்க விட்டுவிட்டோம் என்று இருக்குமோ..?
குளிர் கால கூட்டத் தொடர் - நம்பிக்கையில்லா தீர்மானம் - சிறு வணிகங்களில் அந்நிய முதலீடு என்ற விவாதங்களை நடத்துவதற்கு முன், வழக்கமாக வெடிகுண்டுகள் தான் வெடிக்கும், ஆனால் இந்த முறை திடீரென்று கசாப்பை தூக்கில் போட்டு அமைதிப்படுத்தி இருக்கிறார்களா..?
அல்லது இந்துத்துவ சக்திகளுக்கு, அவர்கள் உண்டாக்கி இருக்கும் இந்து மத உணர்வுகளுக்கு..! நாங்கள் எந்த அளவிற்கும் குறைவானவர்கள் இல்லை என்று காட்டுவதற்கு இந்த தூக்கு நடந்திருக்குமா..?
கசாப், அன்னை சோனியாவையும் அண்ணன் அத்வானியையும் ஒரே நாளில் காப்பாற்றி விட்டார் என்று கருதலாமா..?
இந்த தூக்குத் தண்டனையை எதிர்த்து குரல் கொடுத்த திரு.பழ. நெடுமாறன் அவர்களை பாராட்டி வருகிறது, ஜனநாயகம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற ஜனநாயக அடிப்படைத் தன்மை கொண்டவர்கள்.உலகில் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனையே கூடாது என்று இருக்கும் நிலையில் மரண தண்டனை வேண்டும் என்று ஐ.நா.வில் ஓட்டளித்த நாடு இந்திய நாடுதான்.
இன்றைய உலகில் அரசு வெளிப்படைத் தன்மையாக இயங்க வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு ஆன அரசாக இருக்க வேண்டும் என்ற நிலையில் தான், இந்த தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனை என்றால் இனி ஆயுள் முழுதும் என்று ஆண்டான் அடிமை சமூகத்திற்கு பெருவாரியான மக்களை இட்டுச் செல்கிறதா..? ஆக, மிகச் சிறுபான்மையினரால் ஆளப்படுகின்ற அரசுகள் ..?