தீபத் திருநாள் ,பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது .
எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.
இனிமையான இந்த நாளில் பிறந்த நாள் காணும்
இனிய நண்பர் மு.ரா அவர்களுக்கு கார்த்திகை தீபம் போல வாழ்கையில் எந்நாளும் ஒளிமயமாக வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகிறேன்.!....
தாமதமான வாழ்த்துக்கு சிரம் தாழ்த்துகிறேன் ..
என்றும் அன்புடன் ....
மற்றும், அனைத்து
எழுத்து நண்பர்களுக்கும் , சகோதரிகளுக்கும் ,
கார்த்திகை தீபத் வாழ்த்துக்கள்......!
என்றும் அன்புடன் ....