அய்யனாரே...!

"பள்ளியோடத்துக்கு போய்ட்றேம்மோவ்....." தோளில் பைக்கட்ட மாட்டிக்கிட்டி பள்ளியோடத்துக்கு போற நாளு என்னிக்கி மாறுமோ? பெரிய பள்ளியோடத்துல படிக்கிற பயலுவ எல்லாம் ரெண்டு நோட்டு புத்தவம்தான் கொண்டு போறானுவ... இவனுவள பாத்துபுட்டு ஒரு நா நானும் ரெண்டு நோட்டை கொண்டுகிட்டு போனதுக்கு.... அந்த கணக்கு வாத்தி முருயேசன் மொத்து மொத்துனு மொத்திபுட்டான்.

மனசுக்குள் பேசிக் கொண்டே வீட்ட விட்டு நடந்து கொன்டிருந்தவனை பாசுகரு பாசுகருன்னுன்னு பயலுவ எல்லோம் கூப்பிடுவானுவோ ஆனா அவனுக்கு அவன ரசினியாந்துன்னு சொல்லிகிறதுதலலதான் சந்தோசம்.

ஏம்பி.... எங்காளு எப்டி அடிப்பாரு தெரியுமுல்ல எந்த கமினட்டியும் எங்க ஆளுகிட்ட வரமுடியதுல்லன்னு சொல்லிகிட்டு ரசினிக்கு கொடி புடிக்கிற பயவுள்ள அதே நேரத்துல கமலதாசன காலிப்பயன்னும் சொல்லி சண்ட போடும். ஏலேய்...ஏன்டா அப்புடி சொல்றன்னு கேட்டா ஆமாம் காலிப்பயதான அவன் எப்ப பாத்தாலும் காதலிச்சுகிட்டே இருப்பான் எங்காளு மாறி சண்டையெல்லாம் போட வருமான்னு நம்மளையே திருப்பி கிட்டு கேப்பான்....

எட்டாவது படிக்கையில் உனக்கு என்ன நடிவரு சினிமான்னு போட்டு ஒரு நாளு பாசுகரு பய அப்பாரு அடி வெளுத்து கூட இருக்காரு, அவரும் எம்புட்டு நாளுதான் கண்ணுல வெளக்கண்ணைய ஊத்திகிட்டு பாப்பாரு...அவரு வார நேரம் போற நேரம் ..எலேய் பாசுகரு என்னடா பண்ணுறன்னு கேப்பாரு.... இவனும் வெறப்பா... ' படிக்கிறமுன்ன' ன்னு சத்தமா சொல்லிபுட்டு... எப்ப பாரு ஏவுட்டு பையிலயே கைய வுட்டு பாக்குறதுதான் இவுருக்கு வேல நல்ல அப்பாரு வந்தாரு..எனக்குன்னு...

பேயாமா மள்ளிய கடையிலயே இருக்க வேண்டியதுதானே.. வூட்டுக்கு எதுக்கு வர்றவோ....ன்னு நினைப்பான். பாசுகருகிட்ட கிடந்து அடிவங்குறது அவன் தங்கச்சி மீனாதான்.. ஏச்சு...ஏச்சு.. ஏய் ஆயி... ஏய் ஆயி... காசு கொடுலே..அப்பா சாங்காலம் வருவோல்ல அப்ப எனக்கு காசு கொடுப்போ அப்ப உனக்கு முட்டாயி வாங்கியாந்து தாரேன்னு சொல்லியே ஏச்சு ஏச்சு நொட்டிபுட்டு அடிக்க வேற செய்வான்....

அவன் பள்ளியோடத்துக்கு போகும் போதே பயந்து கழிஞ்சுகிட்டுதான் போவான். பாசுகருக்கும் அவன் கணக்கு வாத்திக்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு இவனுக்கு வரவே வராது கணக்கு வாத்திக்கா கோவம் வந்தா போகவே போகாது.

'ஏன்டா சுரேசு வீட்டுக்கணக்கு செஞ்சியாடா ' மெலிசான குரல்ல கேட்டான் பாசுகரு... இல்லடா வாத்தியாரு சொல்லிக்கொடுக்கவும் மாட்டேன்றான் வீட்லயும் எல்லாரும் சும்மா திட்றாவோ.... சொல்லிக் கொடுக்கவும் மாட்றாவோ? என்னடா பண்றது பாசுகருன்னு கோயில்ல நேந்துகிட்டு முடி இறக்குறப்ப அழுவுற புள்ள மாறி மூஞ்சிய வச்சிகிட்டு கேட்டான் சுரேசு........

சரிடா இன்னிக்கு கணக்கு புரியல சார்ன்னு அவுர்ட்ட தான கேப்போம்டா, அவ்வோ தானே டீச்சரு தெரியலேன்னா சொல்லனுமுன்ன ...வா.. வான்னு மணி அடிச்சுட்டாவோ...ன்னு சொல்லிட்டு அவன் கைய புடிச்சு இழுத்த்துட்டு ஒட்டாமா பள்ளியோடத்துக்கு வந்தான்.

முத பீரியடு தமிழு முடிசஞ்சு ரெண்டாவது அறிவியலு முடிஞ்சு மூணாது பீரியடு கணக்கு
முருயேசன்ஞ்சாரு வந்து உள்ள நொழையுறதுக்கு முன்னால மூங்கி கம்பு வந்து நொழைஞ்சுச்சு..கிளாசுக்குள்ள. ஏண்டா பயலுவளா.. கணக்கு போட்டியளாடா...எங்க நேத்து கொடுத்த வீட்டு கணக்கெலாம்.. ?

தொண்டய கனச்சு கிட்டு அவரு சாதரணமாத்தான் செருமினாரு.. நம்ம பயலுவ பாசுகருக்கும், சுரேசுக்கும் காட்டெருமை செருமறது கனக்கா ஒரு நெனப்பு ரெண்டு பயலுவளும் காதுகுள்ள சொல்லி சிரிக்கிறானுவ ஆன கணக்கு போடலன்றத மறந்துட்டானுவ..

வருசயா ஒரு, ஒருத்தனா போயி முருகேசஞ்சாரு கிட்ட ரைட்டு வாங்கிட்டு போறானுவ கடசில நம்ம பயலுவ ரெண்டு பேரு நிக்கிறானுவ வெத்து நோட்ட வச்சிகிட்டு.....

" ஏய் எருமையளா எங்கடா கணக்குன்னு' கேட்டாரு முருகேசஞ்சாரு...ரெண்டு பயலுவளும் முழிக்கிறானுவ.. பேச்சு வரல.... ரெண்டு கமினெட்டியும் இங்கிட்டு வா...காலைல சோறு தின்னீயல்ல மறந்தா போனீய்? கணக்கு போட ஏன்டா மறந்தீய ங்கொப்பாரு மவனுவளா... நீ அவனை அறைடா கன்னத்துல... அவன் உன்னை அறையட்டும்ன்னு காட்டுக் கொரங்கு கனக்க கத்தினாரு கணக்கு சாரு...

ரெண்டு பயலுவளும் நேர் நேர நின்னுகிட்டு அறைஞ்சு கிட்டானுவோ.... இரண்டு பயலுவளையும் கிளாசுல இருக்குற எல்லா பயலுவலும் பாத்துட்டு சில பயலுவ பயப்படுறானுவோ, சில பயலுவோ சிரிக்கிறானுவோ....பாசுகருக்கும் சுரேசுக்கும் அது எல்லாம் கவலை இல்ல... பொம்பளை புள்ளைய முன்னிக்கி வச்சுகிட்டு அடிக்கிறவொளே நாளைக்கு பாத்து பாத்து சிரிப்பாளுவோளேன்னு கொஞ்சம் கவலைப்பட்டானுவ..

என்னடா அடிச்சுகிறீய? தொட்டா விளையாடுறியன்னு கேட்டுகிட்டே ரெண்டு கையிலயும் ரெண்டு பேத்து தலை மயித்தையும் புடிச்சு வெளு வெளுன்னு வெளுக்குறாரு முருகேசன்ஞ்சாரு ... பயலுவ அழுவுறானுவோ கத்துறானுவோ ம்ம்ம்ம்ஹூம்... முட்டிக்காலு போடச்சொல்லி லாடம் கட்டுறேன்ட பயலுவளா உங்களுக்கு......

ஏம்பி எஞ்சேதி தெரிஞ்சே இப்பாடி வரிய்யன்னா உங்கள என்னடா செய்யலாம்னு சொல்லிகிட்டே..." உங்க ஆயி அப்பான் படிக்க அனுப்புறவ்வோ...நீங்களுவோ நல்லா தின்னு புட்டு ஏய்க்கிறியலாடான்னு குரப்பயலுவளா'ன்னு சொல்லி வெளு வெளுன்னு வெளுக்கிறாரு.......

பள்ளிக்கூடமே அதிந்து போற நிலைமைக்கு பயலுவ கத்துறானுவோ...! அடிய நிறுத்திபுட்டு சரி ....இப்போ என்கிட்டன்னு சந்தேகத்த கேளுங்க பன்னியளா.... சொல்லிட்டு வாத்தியாரு அடிச்ச களைப்புல ஒரு சொம்பு தண்ணிய குடிச்சு புட்டு.....எட்டாபுலயே உசரமான பய பிரபாகரு அவன கூப்பிட்டு .......ஏலேய்... மணி கடைல போயி கணக்கு சாருக்குன்னு சொல்லி நல்ல டீ ஒண்ணு வாங்கிகிட்டு ரெண்டு பருப்பு வடை வாங்கிட்டு வெரசா வா... இந்த பயலுவல சத்தின சாத்துல எனக்கு மயக்கம் வருதுன்னாரு....

கணக்கே புரியாத பயலுவ ரெண்டு பேரும் சந்தேகத்த எப்படி கேப்பனுவ...? மறுவடிக்கி சொல்லித்தாங்க சார்னு பாவமா கேட்டானுவ... வாத்தியாருக்கு வந்துச்சு வெலம்...ஏன்டா...ம****ஆன்டிகளா? என்ன என்ன மொட்டப்பயனு பாத்தியளா ? போயி எங்குட்டாச்சும் சாணி அள்ளி பொழச்சுக்குங்க.. நாளைக்கு வரும் போது கணக்கு போட்டுட்டு வரல அப்புறம் கொன்னே புடுவேன் படுவாங்களா...

கண்ணாம் முழி ரெண்டையும் விட்டு புட்டு தோளை உரிச்சே புடுவேன்....கிளாசு முடியற வரைக்கும் ரெண்டு பேரும் முட்டி போடுங்கடானு சொல்லி முட்டி போடவச்சாரு.. காலு கடுக்க பயலுவ அடிய வாங்கிபுட்டு முட்டி வலிக்க நின்னுகிட்டு நாளைக்கு எப்படி கணக்க போடுறதுன்னு மிரண்டு போய் நின்னானுவா.....

பொழுது சாஞ்சு போச்சு.. ராத்திரி முழுசா பாஸ்கரு போர்வைய போத்திகிட்டு " அய்யனாரே நாளைக்கு கணக்கு வாத்தி வரக்கூடாது பள்ளியோடத்துக்கு இந்த வருசம் திருவிழவுல மொட்டையடிச்சிக்கிறேன் அப்படியே அவரு வந்தாலும் என்னைய ஒண்ணும் செய்யக்கூடாது சாமி...

பக்கத்தூட்டு பாபு இங்கிலீசு பள்ளியோடத்துல படிக்கிறான்.. கருப்பு பூடிசு எல்லாம் போட்டுகிட்டு....கழுத்துல டையி எல்லாம் போட்டு கிட்டு போறன்..அவனையெல்லாம் பள்ளியோடத்துல அடிப்பாவோலா மாட்டாவளா?

சிரிச்சிகிட்டே போறன் சிரிச்சுகிட்டே வாரான்...! ம்ம்ம்ம் அப்பாரு கிட்ட அதுல சேத்தி விடுங்கண்னு சொன்னா...ஏலேய் பாபு அப்பாரு சிங்கப்பூருல இருக்காரு காசு நெறய வச்சுருக்காவோ...ன்னு என்னிய திட்டி புட்டாரு....! ஏன் இவர யாரு மளிய கட வைக்க சொன்னது... சிங்கபூரோ மங்கபூரோ அங்க போவெண்டியதுதானே...

ம்ம்ம் பள்ளியோடத்துக்கு பேரல்லாம் சொல்றாவொ நம்ம பள்ளியோடத்துக்கும் பேரு வச்சிருக்கவொலே..ஊராச்சி ஒன்றிய நடு நிலை பள்ளின்னு....நல்லதா ஒரு பேர் வெச்சா என்ன?

பாபு பள்ளியோடத்துல யாரு டீ வாங்கியாந்து கொடுப்பா......?

கையி வலிக்கி..முட்டி வலிக்கி...முதுகு வலிக்கி.....அய்யனாரே........நாளைக்கு எனக்கு ஒண்ணும் ஆகக் கூடாது வாத்தியாரு லீவு போட்ருணம்னு இல்ல என்னிய ஒண்ணும் கேக்கப்புடாது...'

போர்வைய போட்டு போட்டு போத்திகிட்டு பொலம்பி கிட்டே இருந்தான் பாசுகரு. பொழுது விடிச்சு ரொம்ப நேரமாயியும் அவன் போத்திகிட்டே கிடந்தான். " ஏன்டா பாசுகரு பாசுகரு பள்ளியோடத்துக்கு போக நேரமாச்சு கெளம்புடான்னு' அவன் அம்மா மரகதம் போர்வைய வெலக்கி பாத்துட்டு பதறிப் போனா...சொரத்துல நடு நடுங்கி கண்ணு தொறக்க முடியாம கிடந்தான் பாசுகரு...

சுரேசு பயலுக்கும் காச்ச வந்தாலும் வந்துருக்கும், இல்லாட்டி பள்ளியோடத்துக்கு போயி மறுபடிக்கி அடி வாங்குனாலும் வாங்குவான்..

பாசுகருக்கு காச்ச ரெண்டு நாளுல டாக்டரு கிட்ட காமிச்ச சரியாப் போகும்...அவன் பள்ளியோடத்தையும் முருயேசஞ்ச்சாரையும் யாரு சரி பண்ணுவா?

அய்யனாரு சாமியா......?

எழுதியவர் : Dheva.S (7-Dec-12, 7:24 pm)
பார்வை : 284

மேலே