ரம்யா சரஸ்வதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரம்யா சரஸ்வதி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jun-2014
பார்த்தவர்கள்:  1601
புள்ளி:  948

என் படைப்புகள்
ரம்யா சரஸ்வதி செய்திகள்
ரம்யா சரஸ்வதி - ரம்யா சரஸ்வதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2017 1:45 pm

பரபரப்பான காலை… கணேசனும் , மாலாவும் ஒருவித பதட்டத்துடன் குறுக்கும் நெடுக்குமாய் திரிந்துக்கொண்டு இருந்தனர்… ஆனா இந்த பரபரப்புக்கு காரணமான ஆளு நிம்மதியா தூங்கிக்கிட்டு இருக்கு..அவுங்கதான் நம்ம கதாநாயகி மயூரி..எப்பவும் லேட் தான் எல்லா விசயத்திலும்..சரியான வாலு..இவளுக்குனு ஒரு பட்டாளமே இருக்கு நல்லது கெட்டதுக்கு மட்டும் இல்ல இவளோட வாலு தனத்துக்கும் சப்போர்ட் அவுங்க… சாதனா , மகேஷ் , யாழிசை , மயூரி இந்த நாலுபேரும் ஒரே தெரு தான்… இதுல சாதனா , யாழிசை –க்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கு..நம்ம மயூரிக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகல..இதுதான் இப்ப அவுங்க வீட்ல பெரிய பூகம்பமே…பொதுவா பொண்ண பெத்த எல்லா

மேலும்

ரம்யா சரஸ்வதி - சக்தி ராகவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2015 12:46 pm

வடிந்த நீரெல்லாம்
வான் தந்தது!
வழி இல்லை என்றே
ஊர் வந்தது!
அழுத விவசாயிக்கு
எழுத தெறியாது!
எழுதுகிறேன் அவன்
ஏக்கத்தை!
ஏரிகள் இடமிழந்து
ஆறுகள் தடமிழந்து
முகவரி தேடுகின்ற
முதல் மழை கண்டு!
ஏங்குகிறான் என்
விவசாயி!
எங்கோ பெய்யுதேனு!
வந்த மழை தந்த பதில்
வருவேன் ஆறாக!
ஆக்கிரமித்தோர்
அழுதபின்பு!
இது நீர் செய்யும்
நிலமீட்பு போராட்டம்!
-சக்தி

மேலும்

நன்றி நட்பே 23-Nov-2015 9:33 am
உண்மையான படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:35 pm
நன்றி தோழரே! 22-Nov-2015 8:53 pm
உண்மைதான் நல்ல படைப்பு உலகம் சுவாசிக்கும் காற்றை பிடித்து காகிதத்தில் வாழச் செய்பவன் கவிஞன் 22-Nov-2015 1:21 pm
ரம்யா சரஸ்வதி - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Nov-2015 7:57 am

ஏற்றம் தரா மாற்றம் ஏமாற்றமல்ல!!!
மாற்றம் தரா ஏற்றமே ஏமாற்றம்!!!
🏄🏊🏂

மேலும்

Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) மகிழினி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Nov-2015 12:17 am

தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும்
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் !
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் !
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால்
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் !
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ?
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா )

மேலும்

சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ?கண்டிப்பா இல்லை அம்மா..... அழகிய பாடல் மிகவும் அழகு அம்மா......! 05-Nov-2015 10:50 am
சேய் போல மகிழ்வுதரும் சொந்தம் இல்லை..அடித்து சொல்ல இயலும்.. அழகான சொல்லாடல் என்பதைத் தவிர மரபுக் கவிதை இலக்கணம் பற்றி யாமறியேன் பராபரமே.. தாலாட்டு எந்த வகைமைக் கவிதையில் இருப்பினும் அருமையே.. 05-Nov-2015 10:08 am
தாய் பாடும் ஆராரோக்கு நிகரில்லை .....பாடல் அருமை அம்மா.... 05-Nov-2015 10:05 am
என்ன சொல்வது தாய்க்கு உலகில் ஏதும் இணை உண்டா? 05-Nov-2015 12:27 am
ரம்யா சரஸ்வதி - ரம்யா சரஸ்வதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2015 10:24 pm

நாளைக்கு ஆகஸ்ட்15......இந்தியா சுதந்திரம் அடைந்தநாள்!!!!

இந்த சுதந்திரம் வாங்க எத்தனையோபேர், வியர்வை,இரத்தம் சிந்தியிருக்காங்க.
இப்படி கஷ்டப்பட்டு வாங்குன சுதந்திரத்தக்கூட நம்ம மக்கள் நல்லநாள்
பார்த்துதான் வாங்குனாங்க.ஏன்னா, இனியாவது நம்மநாடு முன்னேறட்டும்,
மக்களுக்கு நல்லது நடக்கட்டும்-ன்றதால.ஆனா நடக்குறது என்னமோ வேற. சரி,சுதந்திரம் நல்லநாள் பார்த்து வாங்குன கதை எத்தனப்பேர்க்கு தெரியும்? தெரியாதவங்க இப்ப படிச்சு தெரிஞ்சுக்கோங்க……

ஆகஸ்ட்15 இந்தியாக்கு சுதந்திரம்–னு வெள்ளக்காரங்க சொல்லிட்டாங்க.
ஆனா,நம்ம ஆளுங்க முகத்துல ஒரே கலவரம். என்னானு பாத்தா, ஆகஸ்ட்15 அஷ்டமி.அடுத்தநாள் 16 நவமி, ந

மேலும்

ஹ்ம்ம் ... நிச்சயம் மாற்றம் பிறக்கும்... நம்புவோம்.. :) 24-Aug-2015 1:06 pm
ஆங்கிலம் அறிவா மாறதுனால இன்னைக்கு தமிழர்கள் பல இடங்களில் அவமானபடறாங்க...பள்ளிகளில் கூட ஆங்கிலத்தில தான் பேசணும்னு கட்டுப்பாடு, இத எல்லாம் மாத்தனும்னா ஒவ்வொருத்தரும் மாறனும்...ஆங்கிலத்த மொழியா தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தணும்...தமிழர்கள்னு சொல்லிட்டு இங்கு பலர் ஆங்கிலேயர்களா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க...இது போன்ற பகிர்வுகள் சிலரிடமாவது மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம் தோழமையே... 21-Aug-2015 3:21 pm
நன்றி தோழமையே ... உண்மை தான் இன்று பயனில்லாமல் தொலைந்துக்கொண்டுதான் இருக்கிறது..ஹ்ம்... பிழையை திருத்திவிட்டேன் :) நன்றி 19-Aug-2015 10:37 am
தோழி... மிகவும் அருமை, வாழ்த்துக்கள் தூயதமிழ் அழிஞ்சு, ஆங்கிலம் கலந்த கலப்பட தமிழ்தான் வளர்ந்துட்டு வருது. இந்த உலகத்திலயே தமிழ்தான் முதல்மொழி. ஆனா இன்னைக்கு, அது அழிஞ்சுட்டு வரத நாம தடுக்க முடியாம பாத்துட்டு இருக்கோம். வெளிநாடுகளில் தமிழ்க்கு முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க பல்கலைகழத்தில் தமிழுக்காக தனி துறை வருகிறார்கள். இதுபோல பல வெளிநாடுகளில் தமிழுக்கு தனி கொடுத்தும் வருகிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் நடப்பது என்னவோ பிறமொழிக்கு கொடுக்கு அளவிற்கு கூட நம் தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கமறுக்கிறோம். “எப்ப ஒரு பொண்ணு கழுத்து நிறைய நகையப்போட்டு தன்னந்தனியா எந்தவித பாதிப்பும் இல்லாம நடுராத்திரில திரும்பி வருதோ, அப்பதான் இந்தியாவுக்கு உண்மையா சுதந்திரம்” -னு நம்ம மகாத்மா காந்தி சொன்னார்…. தோழி சரியாக சொன்னிர்கள்..... இப்பொழுது எல்லாம் நாளிதழில் நற்செய்திகளைவிட இதுபோன்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வரும்பொழுது. அவர்கள் அன்று தங்கள் இன்னுயிரை கொடுத்து வாங்கி கொடுத்த சுதந்திரத்திற்கு பயனில்லாமல் போய்விடுமோ என்று நினைக்கதொன்றுகிறது. மன்னிக்கவும், ஒரு சிறிய திருத்தம் "நம்மநாடு எப்பவோ வல்லராகி இருக்கும்". -----------------நம்மநாடு எப்பவோ வல்லரசாகி இருக்கும். மிகவும் அருமை, வாழ்த்துக்கள் .................... ஜெய் ஹிந்த் !!!!!!!!!!!!!!!! 17-Aug-2015 4:09 pm
ரம்யா சரஸ்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2015 10:24 pm

நாளைக்கு ஆகஸ்ட்15......இந்தியா சுதந்திரம் அடைந்தநாள்!!!!

இந்த சுதந்திரம் வாங்க எத்தனையோபேர், வியர்வை,இரத்தம் சிந்தியிருக்காங்க.
இப்படி கஷ்டப்பட்டு வாங்குன சுதந்திரத்தக்கூட நம்ம மக்கள் நல்லநாள்
பார்த்துதான் வாங்குனாங்க.ஏன்னா, இனியாவது நம்மநாடு முன்னேறட்டும்,
மக்களுக்கு நல்லது நடக்கட்டும்-ன்றதால.ஆனா நடக்குறது என்னமோ வேற. சரி,சுதந்திரம் நல்லநாள் பார்த்து வாங்குன கதை எத்தனப்பேர்க்கு தெரியும்? தெரியாதவங்க இப்ப படிச்சு தெரிஞ்சுக்கோங்க……

ஆகஸ்ட்15 இந்தியாக்கு சுதந்திரம்–னு வெள்ளக்காரங்க சொல்லிட்டாங்க.
ஆனா,நம்ம ஆளுங்க முகத்துல ஒரே கலவரம். என்னானு பாத்தா, ஆகஸ்ட்15 அஷ்டமி.அடுத்தநாள் 16 நவமி, ந

மேலும்

ஹ்ம்ம் ... நிச்சயம் மாற்றம் பிறக்கும்... நம்புவோம்.. :) 24-Aug-2015 1:06 pm
ஆங்கிலம் அறிவா மாறதுனால இன்னைக்கு தமிழர்கள் பல இடங்களில் அவமானபடறாங்க...பள்ளிகளில் கூட ஆங்கிலத்தில தான் பேசணும்னு கட்டுப்பாடு, இத எல்லாம் மாத்தனும்னா ஒவ்வொருத்தரும் மாறனும்...ஆங்கிலத்த மொழியா தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தணும்...தமிழர்கள்னு சொல்லிட்டு இங்கு பலர் ஆங்கிலேயர்களா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க...இது போன்ற பகிர்வுகள் சிலரிடமாவது மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம் தோழமையே... 21-Aug-2015 3:21 pm
நன்றி தோழமையே ... உண்மை தான் இன்று பயனில்லாமல் தொலைந்துக்கொண்டுதான் இருக்கிறது..ஹ்ம்... பிழையை திருத்திவிட்டேன் :) நன்றி 19-Aug-2015 10:37 am
தோழி... மிகவும் அருமை, வாழ்த்துக்கள் தூயதமிழ் அழிஞ்சு, ஆங்கிலம் கலந்த கலப்பட தமிழ்தான் வளர்ந்துட்டு வருது. இந்த உலகத்திலயே தமிழ்தான் முதல்மொழி. ஆனா இன்னைக்கு, அது அழிஞ்சுட்டு வரத நாம தடுக்க முடியாம பாத்துட்டு இருக்கோம். வெளிநாடுகளில் தமிழ்க்கு முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க பல்கலைகழத்தில் தமிழுக்காக தனி துறை வருகிறார்கள். இதுபோல பல வெளிநாடுகளில் தமிழுக்கு தனி கொடுத்தும் வருகிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் நடப்பது என்னவோ பிறமொழிக்கு கொடுக்கு அளவிற்கு கூட நம் தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கமறுக்கிறோம். “எப்ப ஒரு பொண்ணு கழுத்து நிறைய நகையப்போட்டு தன்னந்தனியா எந்தவித பாதிப்பும் இல்லாம நடுராத்திரில திரும்பி வருதோ, அப்பதான் இந்தியாவுக்கு உண்மையா சுதந்திரம்” -னு நம்ம மகாத்மா காந்தி சொன்னார்…. தோழி சரியாக சொன்னிர்கள்..... இப்பொழுது எல்லாம் நாளிதழில் நற்செய்திகளைவிட இதுபோன்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வரும்பொழுது. அவர்கள் அன்று தங்கள் இன்னுயிரை கொடுத்து வாங்கி கொடுத்த சுதந்திரத்திற்கு பயனில்லாமல் போய்விடுமோ என்று நினைக்கதொன்றுகிறது. மன்னிக்கவும், ஒரு சிறிய திருத்தம் "நம்மநாடு எப்பவோ வல்லராகி இருக்கும்". -----------------நம்மநாடு எப்பவோ வல்லரசாகி இருக்கும். மிகவும் அருமை, வாழ்த்துக்கள் .................... ஜெய் ஹிந்த் !!!!!!!!!!!!!!!! 17-Aug-2015 4:09 pm
ரம்யா சரஸ்வதி - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2015 2:11 pm

அவர் அனுப்பும்
ஏவுகனைகள் கூட
கருணை கக்கிக் கொண்டுதான் சீறுகிறது...

எப்போதும் புன்னகைக்கும்
பூந்தோட்டமென
கனவுகளின் திறவுகோலையே
தருகிறார்....

எதிர்கால வளையத்தை
நிகழ்காலக் கரங்களில்
விட்டு விட்ட
அக்னிக் கடவுள் அவர்...

தன்னலம் அற்று
விண் நலம் காக்கும்
மண்ணுலகம் தந்த ஹிப்பி
வைத்த அறிவியல் அவர்....

சென்ற இடமெல்லாம்
கல்வியை விட்டுச் செல்லும்
நூலகம் அவர்...

சிறகுகளின் வெளிகளை
சின்னஞ்சிறு குழந்தைகளின்
கண்களில் கொட்டிய விசைக்காரர்..
கூட இசைக்காரர்....

மகாத்மா என்றொரு
சொல்லுக்கு மீண்டும்
உயிர் கொடுத்தவர்,
ஆன்மாவின் வலிமையோடு
இன்னும் இன்னும் நிறைகி

மேலும்

ஹ்ம்ம் :) 17-Aug-2015 11:08 am
எப்போதும் புன்னகைக்கும் பூந்தோட்டமென கனவுகளின் திறவுகோலையே தருகிறார்.... எதிர்கால வளையத்தை நிகழ்காலக் கரங்களில் விட்டு விட்ட அக்னிக் கடவுள் அவர்... தன்னலம் அற்று விண் நலம் காக்கும் மண்ணுலகம் தந்த ஹிப்பி வைத்த அறிவியல் அவர்.... ---------------------------------------------- அத்தனை வரிகளுக்கும் அப்துல் கலாம் அய்யாவுக்கு மிகப் பொருத்தம். 17-Aug-2015 10:53 am
கண்டிப்பாக ரம்யா.... நன்றி.. 17-Aug-2015 10:38 am
கனவைக் கண்டே தீர்வது தான் அவருக்கான சமர்ப்பணம்.... மரம் மட்டுமா நட்டார்.... மனங்களையும் தான்... எனக்கும் எவர்க்குள்ளும்.... மிக உண்மை வரிகள் ஜி...மகா எளிய கருணை மனிதர் :( 13-Aug-2015 4:00 pm
ரம்யா சரஸ்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2015 8:16 pm

எத்தனையோ வரலாறுகள் படித்து இருப்பீர்கள்…ஆனால் வெள்ளையத் தேவன் பற்றிய வரலாற்றை அறிந்ததுண்டோ ??? யார் இந்த வெள்ளையத்தேவன் ??? வீரத்திற்கு பெயர் போன கட்டபொம்மனின் வீரத்தளபதி…..இவர் போன்ற வீரத்திருமகனின் மரணத்தைப்பற்றி படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது….இவரைப்பற்றிய சிறுகுறிப்பு காண்போம்…

சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்புகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன்தான் வெள்ளையத்தேவன் என சிலர் கூறுகின்றனர். வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே சிறந்த வீரம் கொண்டவர். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர

மேலும்

நன்றி அக்கா :) 26-Feb-2015 3:56 pm
நன்றி அண்ணா :) 26-Feb-2015 3:54 pm
நன்றி தோழமையே :) 26-Feb-2015 3:54 pm
ஆமா ஜி :) நன்றி :) கொஞ்சம் நேரம் இல்லை ...அதான் லேட் ஆகிடுச்சு...இல்லனா இன்னும் புதுசா எதாவது எழுத முயற்சி பண்ணி இருப்பேன்.. 26-Feb-2015 3:54 pm
ரம்யா சரஸ்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2015 10:03 pm

!!!!!!!!!!!!!!!!! உண்மை காதலால் உயிர் அற்றப் பொருளும் உயிர்கொண்டு எழும் !!!!!!!!!!!!!!!!!


அதிகாலை அடர்ந்த பனி, அழகிய பூங்கா!!!!!!!!….அங்கு இருக்கும் சாய்நாற்காலி யாருடைய வரவேற்பிற்காக காத்திருப்பது போல் இருந்தது…ஆம் அங்கு இருக்கும் சாய் நாற்காலிக்கு அங்கு வரும் ஒவ்வொரு மனிதரின் முகமும் அவர்களது வாழ்க்கையும் மிகப் பரிச்சையம்…அப்படிதான் நிரஞ்சனும்,நிரல்யாவும்….

இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் புரிந்தவர்கள்…..அதிகாலையில் இருவரும் ஒன்றாக எழுந்து வாக்கிங் போவது பழக்கம்….அப்பொழுது அந்த சாய் நாற்காலியில் இருவரும் அமர்ந்து சிறிது நேரம் மனம்விட்டு பேசும் பழக்கம் உண்டு…அவர்கள

மேலும்

வாழ்க்கையில இது போன்ற குட்டி குட்டி சண்டைகள் அவசியம் தேவை அழகான கதை 14-Oct-2016 5:52 am
ஆமா :) 21-Feb-2015 7:58 am
இப்படிதான் அன்பா, பிரியமா இருக்கணும். 20-Feb-2015 10:47 am
நன்றி அக்கா :) கண்டிப்பா போடுறேன்... 19-Feb-2015 2:55 pm
ரம்யா சரஸ்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2014 4:29 pm

மீண்டும் பயணம் கிராசிங்கில் இருந்து தொடர்கிறது......

கிராசிங் ஓவர்-

ரயில் புறப்படும்போது என்னைப்பார்த்து ஒரு கிராசிங் வந்துச்சு...….

அது ரயில் இல்ல…ஒரு பயபுள்ள….. என்னையே குறு குறுன்னு பார்த்தான்….….நான் அப்பதான் கவனிச்சேன்….இருந்தாலும் ஒரு சந்தேகம் நம்மளதான் பாக்கறானா-னு திருப்பி பார்த்தேன்… ( பெண்களுக்கேஉண்டான இயல்பான குணம் தானே…?.இதைதான் சில ஆண்கள் தவறாக புரிந்துகொண்டு கற்பனையில் பறக்கின்றனர் )

இப்ப ஊர்ஜிதம் ஆகிடுச்சு…..

“சரி ரம்யா ரயிலவிட்டு இறங்கறவரை இந்த பக்கமே பார்க்ககூடாதுனு” சன்னல் பக்கம் திரும்பிட்டேன்…கழுத்துவலிதான் மிச்சம்….

அப்பதான் சன்னல் வழியா அந்தக்காட்சிய பா

மேலும்

நன்றி அண்ணா :) எல்லாம் தங்களைப்போன்றவர்களின் தொடர் ஊக்கம் தான் காரணம் :) :) 30-Nov-2014 12:39 pm
இயல்பாய் அழகான பயணக்கட்டுரை எழுதவும் ஒரு திறமை வேணும் அது தங்கை ரம்யாகிட்ட நிறையா இருக்கு.. சும்மா ரயில்ல போனேன்.. அத பார்த்தேன் இத பார்த்தேன்னு சொல்லாமா கூடவே சமூகத்திற்கு சாட்டையடி கொடுக்கும் வரிகளில் படைப்பாளியின் பணியினை கச்சிதமாக செய்கிறாய் ரம்யா...! ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கட்டுரை எனக்கு,,! 30-Nov-2014 12:37 pm
ஹ்ம்ம் :) வரும் வரும்.... இன்னும் இல்ல அக்கா :) ஒருப்பயலும் சன்னல் பக்கம் டீ கொண்டுவரமாட்டிக்குறான்....நீங்க தாங்க எனக்கு :) சூட குடிச்சிட்டு தெம்பா எழுதிமுடிக்குறேன்.... :) :) 29-Nov-2014 4:30 pm
நல்ல பயணம்தான் நெல்லை பயணம்.... ம் அப்புறம் என்னாச்சி ரம்யா... டீ குடிச்சாச்சா... நான் டீ போட்டுதரவா... அழகாய் பயணிக்கிறது பயணம்... 29-Nov-2014 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (171)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
தினேஷ்

தினேஷ்

திருச்சிராப்பள்ளி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (173)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (175)

user photo

SIMBUCIVIL

vellore
user photo

Aaran

Tirunelveli
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே