Abitha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Abitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Nov-2011
பார்த்தவர்கள்:  1248
புள்ளி:  32

என் படைப்புகள்
Abitha செய்திகள்
Abitha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 4:04 pm

கலாம்களும் கமால்களும்

கமல்களும்

இலாதுபோகும்

நாள்வரும்

இருந்தபோது

செய்தவை

அனைத்துமே

கணிப்பது

ஹெவன் என்று

ஒருவனும்

பரம் என்று ஒருவனும்

ஜன்னத்தென்று ஒருவனும்

மாறி மாறிச் சொல்லினும்

இகத்திலேயவன்

நடந்த பாதையே

புகழ் பெறும்

நிரந்தரம் தேடுகின்ற

செருக்கணிந்த

மானுடர்

தொண்டருக்கடிப்பொடி

அம்மெய்யுணர்ந்த நாளிது

புகழைத் தலையிலேந்திடாது

பாதரட்சையாக்கிய

கலாம் சாஹெப்

என்பவர்க்கு

சலாம் கூறும் நாளிது…

மேலும்

Abitha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 4:01 pm

வாலிபக் கவிஞரே வாலி
வாழ்வாங்கு வாழ்ந்தவரே வாலி - நீ
தமிழ்க் கவியில்
நுண்மாண் நுழைபுழம் மிக்க ஆழி!
காதல் பாடல்களில்
எம் மனதைத் தாலாட்டும் தூளி!
சோகப் பாடல்களில்
மனதை கவிழ்த்துப் போடும் சோழி!
தத்துவத்தில்
எம் மனதை ஆழ உழும் மேழி!
வீரத்தில்
எமை தட்டி எழுப்பும் சேவற்கோழி!
காவியத்தில்
எமைக் கவர்ந்த அறி வாளி!
நீ மறைந்தாலும்
உம் வரிகள் இவ்வுலகில் வாழி வாழி!

மோகனன்

மேலும்

நானும் வாலியின் மிகப்பெரிய ரசிகை.. ""விரல்களைத்தாண்டி வளர்வதைக்கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு "" .. அட அட அட என்ன அருமையான வரிகள்.. இனொருவர் இனி பிறந்தாலும் வாலிக்கு ஈடாக முடியாது.. 23-Sep-2015 4:18 pm
Abitha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 3:59 pm

புகழ் என்னும் பூமாலை தொடுத்தவரே
நிழல் படத்தை நிஜமாக்கி எடுத்தவரே
தீந்தழலாகி நிற்கும் கோபத்தை
"தண்ணீர் தண்ணீர்" கொண்டு அனைத்தவரே!

திருநீறு பூசிய "நன்னிலம்" சீர்திருத்தவாதி
உறவுமுறை தரும் சிக்கல்களை தீர்த்தவாதி
வாழ்வியல் கொடுமைகளை எரிக்கும் ஜோதி
சமூக அவலம் சொல்லுவது இவரதுநீதி!

திரையுலக நட்சத்திரங்கள் தேம்பி நின்று!
"மழலைபட்டாள"மாய் அழுது புலம்புகின்றதே!
உனது மறைவைக் கேட்டு முதன் முதலில்
உதய சூரியனும் தேடி ஓடி வருகின்றதே!

கையளவு மனசை காலன் இன்று !
வென்று! கொண்டு சென்று விட்டானே !
மோதிரக் கை குட்டுபட நன்று !
" பூவா தலையா " போட்டு நின்றானே!

தமிழ்த் தாயகமே தத்தளித்து தவிக்கு

மேலும்

Abitha - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 3:54 pm

மெல்லிசை மன்னரின்
இசைமூச்சு நின்றுவிட்டது
என்று சொல்வதா?

இந்த நூற்றாண்டில்
அதிகமாக வாசிக்கப்பட்ட
ஆர்மோனியம் அடங்கிவிட்டது
என்று சொல்வதா?

ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி
மறைந்துவிட்டார் என்று சொல்வதா?

எங்கள் பால்ய வயதின் மீது
பால்மழை பொழிந்த மேகம்
கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப்
பொற்காலம் தந்தவரே!
போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

அரை நூற்றாண்டு காலமாய்த்
தமிழர்களைத் தாலாட்டித்
தூங்கவைத்த கலைஞன்
இன்று இறுதியாக உறங்கிவிட்டார்.

அவரது இசை
இன்பத்துக்கு விருந்தானது;
துன்பத்துக்கு மருந்தானது.

அவரது இசை
தமிழின் ஒரு
வார்த்தையைக்கூட உரசியதில்லை.

ஒரு ந

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்
ஸ்ரீனிவாசன் அம்சவேணி

ஸ்ரீனிவாசன் அம்சவேணி

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஸ்ரீனிவாசன் அம்சவேணி

ஸ்ரீனிவாசன் அம்சவேணி

கோயம்புத்தூர்
தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே