கரு அன்புச்செழியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கரு அன்புச்செழியன்
இடம்:  சிவகங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2017
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  29

என் படைப்புகள்
கரு அன்புச்செழியன் செய்திகள்

இதுவும் கடந்து போம்

  --------------------------------
உலகின் குளிர் பிரதேசங்களைக்கூட சூடாக்கியிருக்கிறது கொரோனா. நிசப்தங்களையே உலகச்சாலைகளின் மொழியாக்கியிருக்கிறது. 

இந்த பூமிப் பந்தின்மீது பூத்துக்கொண்டே போகிற இருமிக்கிருமி, 
பல தேசங்களின் ஆணவங்களை அடக்கி முடக்கியிருக்கிறது. 
அரசுக்கும் மக்களுக்குமான அன்பை வளர்த்திருக்கிறது. 
அரசு இயந்திரத்தை சேவைச்சாலையில் செலுத்தியிருக்கிறது. 
ஆபத்துக் காலங்களில் அரசும் அமைச்சும் காட்டும் முனைப்பைக் கூட்டியிருக்கிறது.
மனித மதங்களையும், அடையாளங்களையும் மறக்கடித்திருக்கிறது. 

வீதிகளின் மூலை முடுக்கெல்லாம்கூட பயம் படர்ந்து கிடக்கிறது. பஞ்சாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் கோழிக்குஞ்சுகளைப்போல குழந்தைகள் வீட்டிற்குள் பதுங்கிக்கிடக்கிறார்கள். 

இயற்கைத்துன்பங்களில் நிலையான ஒன்று நோய். நோய் மனிதனில் இயல்பு. ஒவ்வொரு நாளும் நோய்களை எதிர்த்து, உள்ளுக்குள் போராடிவரும் நம் உடம்பு தான் சூரசம்காரக் கடவுள்.  

பறவை, பாலூட்டி போல மனிதனும் நோய் வழங்கும் காரணியாகிப்போனது இந்த நச்சுயிரியின் கோர உச்சம். இந்த தீநுண்மிக்கு எதிரான ஒட்டுமொத்த தேசங்களின் உயிர்ப்போராட்டம், சங்கிலித்தொடர்போல நீள்கிறது. 

 அனைத்துலக பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஒட்டுமொத்த உலகத் தலைவர்களையெல்லாம் வீட்டின் உள்ளுக்குள் வைத்துப் பூட்டிவிட்டது காலம். உலக உயிர்களின் மீதெல்லாம் பேரன்பு கொண்ட பெரிய மனங்கள் தங்களின் பொருளுதவியை அளிக்கத் துவங்கியிருக்கிறது. கைகுவித்துப் பாராட்டுவோம். எத்தனையோ காலங்களில், ஒதுக்கப்பட்ட நிதி பதுக்கப்பட்டிருக்கிறது. திறமையற்ற செயல்பாடுகளற்ற மனிதர்களால் செலவழிக்கப்படாமலேயே போயிருக்கிறது . 

 கொரோனா உயிர்களை வாரிக்கொண்டு போவதற்கு முன்னால், வழங்கப்பட்டிருக்கும் அரச நிதி,  செயல்பாடுகளுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை. 

நோய்த்தொற்று வளரும் இந்த நேரத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊர்தி ஊட்டுனர்கள், ஊடகவியலாளர்கள், களப்பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள்  மற்றும் காவல்துறையினர் இவர்களின் கடமைக்கு நன்றிபாராட்டி வீட்டுக்கு வெளியே வந்து 5 மணிக்கு கூடி நிற்பதைத் தவிர்த்து, இத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி நவிலும் விதமாக, பொதுவான வாசகங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை நண்பர்கள் மூலம் கைபேசிகளில் பகிர்வோம். அது அவர்களை சென்றடையும்போது மனதை நெகிழ வைக்கும், ஊக்கப்படுத்தும்.

 1960 களில் கண்டுபிடிக்கப்பட்ட கொரொனாவின் மூல மொழி இலத்தீனில், பூக்கள் கொண்ட அரசகிரீட வட்டம் என்பது போன்ற பொருள் கொண்டது. 1956-ல் துவங்கப்பட்ட வூகான் இன்சிட்டியூட் ஆப் வைராலஜி (Wuhan Institute of Virology) சீனாவின் வூகானில் இருப்பதனாலேயே, நிகழ்வுகளை திட்டமிட்ட சதியென்றும், உண்மைக் காரணங்கள் மறைக்கப்படுகின்றன என்பது போன்ற திரிந்த பிறழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களால் கூறப்படும் சதி கோட்பாடுகள் எனப்படுகிற (Conspiracy theories) கருத்துக்கள் கொரொனா குறித்து நிறையவே காணக்கிடைக்கிறது.   

நியூயார்க் போஸ்ட் -ல் அமெரிக்காவின் Steven W. Mosher, வூகான் வைராலஜி ஆய்வக மனிதர்கள்மூலம் நோய் பரவியிருக்கலாம் என தாம் நம்புவதாக வெளியிட்ட செய்தி, மற்றும் சீனாவில், ஒன்றரை கோடி மக்களின் தொலைபேசி இணைப்புக்கள் காணாமல் போய்விட்டதாக கிடைக்கும் அதிர்ச்சி செய்தி, இவற்றை நாம் எப்படி எடுத்துக்கொள்வதென்று புரியவில்லை.  

கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரமின்றி இருக்க நேரிடலாம் என கொரோனா குறித்து ஐ நா சபையும் அச்சம் தெரிவிக்கிறது. 

 இச்சமயத்தில் ஒன்றை நினைவு கூற தேவையாகிறது. அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கடுமையாகச்சாடிய வார்த்தைகள் இன்று உலகச்சூழ்நிலையோடு மிகச்சரியாக பொருந்திப்போகிறது.

உண்மைதான்… நாம் பேசியவற்றில் பெரும்பாலானவை பொருளாதாரம்தானே. வலி மிகுந்த காலங்களில் வலிமை மிக்க வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம். உயிர்களிடத்து அன்பு கொள்வோம். இதுவும் கடந்து போம். 

மேலும்

கரு அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2017 7:06 am

மறதி
----------------
மருந்தும் கல்வியும் இலவசம் என்பது
மறந்துபோனது நமக்கு - கொடிய
பருந்தும் ஆந்தையும் ஆளும் நாட்டில்
பகலும் இரவும் எதுக்கு

அருந்தும் மதுவும் வருந்தும் சிறையும்
அவமானம் என்பது போச்சு - தன்னை
மறந்தான் திருந்தா மனிதன் இறந்தான்
மதுவே அரசின் மூச்சு

இறந்தா போனாய் எழுவாய் மனிதா
பிறந்தாய் தமிழின் பிழையாய் - மொழி
மறந்தால் துறந்தால் மலமாய் புழுவாய்
மறைவாய் யொருநாள் முழுதாய்

- கரு அன்புச்செழியன்

மேலும்

கரு அன்புச்செழியன் - கரு அன்புச்செழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2017 1:29 am

"தாய் வலி"
-கரு. அன்புச்செழியன்
--------------------

நகரத்தின்
அதிமுக்கிய வீதிகளின்
நாற்றமெடுக்கும்
சாக்கடையோர அழுக்குச்சுவர்களில்,
“குழந்தை காணவில்லை”
என ஒட்டப்பட்ட
வறண்ட சுவரொட்டிகள்
ஒவ்வொன்றும்
அவதானத்தின் அவசியத்தை
ஏளனமாய் விதைக்கிறது நெஞ்சில்

அருகில் இருக்கும்
மரணித்தவனுக்கான
"கண்ணீர் அஞ்சலி" யை விட
வலி தருகிறது
அதில்
காணக்கிடைக்கிற
குழந்தையின் முகம்

பறிகொடுத்த வலி
இடம்மாறி அழுத்தும்
அனுபவமில்லாமலேயே
பிள்ளை பெற்றவருக்கெல்லாம்

என்ன செய்வாள் இந்நேரம்..

தகரமோ, ஓலையோ வேய்ந்த
கொசுக்கள் மொய்க்கும்
கொட்டாரங்களின் திண்ணைகளில்
குழந்தை குடி

மேலும்

நண்பரின் கருத்துக்கு நன்றி 20-Nov-2017 8:52 am
கருத்து பதிவிட வார்த்தைகள் தோன்ற வில்லை நட்பே .....வார்த்தைகளால் சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது.......... 18-Nov-2017 12:52 pm
கரு அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2017 1:29 am

"தாய் வலி"
-கரு. அன்புச்செழியன்
--------------------

நகரத்தின்
அதிமுக்கிய வீதிகளின்
நாற்றமெடுக்கும்
சாக்கடையோர அழுக்குச்சுவர்களில்,
“குழந்தை காணவில்லை”
என ஒட்டப்பட்ட
வறண்ட சுவரொட்டிகள்
ஒவ்வொன்றும்
அவதானத்தின் அவசியத்தை
ஏளனமாய் விதைக்கிறது நெஞ்சில்

அருகில் இருக்கும்
மரணித்தவனுக்கான
"கண்ணீர் அஞ்சலி" யை விட
வலி தருகிறது
அதில்
காணக்கிடைக்கிற
குழந்தையின் முகம்

பறிகொடுத்த வலி
இடம்மாறி அழுத்தும்
அனுபவமில்லாமலேயே
பிள்ளை பெற்றவருக்கெல்லாம்

என்ன செய்வாள் இந்நேரம்..

தகரமோ, ஓலையோ வேய்ந்த
கொசுக்கள் மொய்க்கும்
கொட்டாரங்களின் திண்ணைகளில்
குழந்தை குடி

மேலும்

நண்பரின் கருத்துக்கு நன்றி 20-Nov-2017 8:52 am
கருத்து பதிவிட வார்த்தைகள் தோன்ற வில்லை நட்பே .....வார்த்தைகளால் சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது.......... 18-Nov-2017 12:52 pm
கரு அன்புச்செழியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2017 3:45 am

மேகம்
-------------------
வானத்தாயவள்
வண்ணச் சேலையில்
வந்து விழுந்த
வறுமைக் கிழிசல்கள்

காற்றின் போக்கினால்
கலைந்து போன
பழுத்த கிழவியின்
வெளுத்த கூந்தல்

வான்வெளிக் கவிஞனின்
வறட்டுக் கற்பனையால்
காற்றுக் கூடையில்
வந்து விழுந்த
காகிதக் கசக்கல்

மலை முகடெங்கும்
மனிதர் மேனியில்
காற்று கொடுக்கும்
எச்சில் முத்தம்
ஈர ஒத்தடம்

வானப் பரப்பில்
வந்து வெடித்த
எருக்கிலைக் காயின்
ஏகச்சிதரல்

ஆகாயக் காட்டில்
அசைந்து நடக்கும்
தொல்லையில்லாத
வெள்ளை வாரணம்

- கரு அன்புச்செழியன்

மேலும்

கரு அன்புச்செழியன் - கரு அன்புச்செழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2017 11:07 pm

மரணம்
----------------
முழு நீள யாத்திரையில்
முழுதான நித்திரை

உயிர்ப்பெண்
உடம்புக் கணவனுடன்
செய்துகொள்ளும்
ஒப்பந்த ரத்து

எல்லா உயிர்களுக்கும்
காலம் கொடுக்கிற
கட்டாய தண்டனை

ஒரு
நீண்ட மயக்கம்
அல்லது
நிம்மதி உறக்கம்

முன்னுரை பிறப்பென்பதால்
முடிவுரை இறப்பு

கண்களை மூடிவைப்பார்
கண்டது போதுமென்று

கால்களைக் கட்டி வைப்பார்
கடந்தது போதுமென்று

உறவுகள் வருவார்
உரியவர் அழுவார்

உடம்பின் பயணம்
உடனே துவங்கும்

உறவுகள் அனைத்தும்
ஊர்வலம் போகும்

பிறவியில் செய்தது
பேச்சுக்கள் ஆகும்

ஆடும்வரைதான்
அவனவன் பெயர்கள்

அடங்கிப்போனால்
பிணம்தான் பேராம்

விதைத்தவன் எவ

மேலும்

அற்புதம்...மிக்க நன்றி 14-Nov-2017 3:23 am
மிக்க நன்றி 14-Nov-2017 3:22 am
மிக்க நன்றி 14-Nov-2017 3:22 am
ஒரு புறம் பூங்காற்று மறு புறம் புயல்காற்று இரண்டும் போராடி சமாதான ஒப்பந்தம் கைமாற்றி சுவாசக் காற்றாய் நெஞ்சில் நுழைகிறது. காலத்தின் எண் கணிதத்தில் அதுவும் சோர்வாகி மண்ணுக்குள் மண்புழுவால் வேரறுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 1:17 pm
கரு அன்புச்செழியன் - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 10:08 pm

கவிதைக்காடு -- தரவு கொச்சகக் கலிப்பா

கவிதைகளின் காட்டினிலே கவிஞர்கள் சங்கமமே !
செவிதனிலே நெஞ்சம்வழி செப்பேடும் சென்றிடுமே .
புவிதனிலே சான்றோர்கள் புத்தாக்கம் செயவேண்டிக்
கவிதைகளை வனைந்துள்ளார் கற்போமே யாவருமே !

நூல்களுமே ஆயிரமாம் நுணுக்கமான கருத்துகளாம் .
ஆல்விழுதைப் போன்றதொரு அற்புதத்தின் களஞ்சியமே !
பால்மதிக்கும் இடமுண்டு பாரினையும் ஆண்டிடவே !
மேல்கீழோர் வேறுபாடும் மேதினியில் இல்லையினி !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

பூங்காவில் பூக்கள் மட்டும் இல்லை முட்களும் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:19 am
அருமை 20-Sep-2017 3:07 am
கரு அன்புச்செழியன் - கரு அன்புச்செழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2017 8:43 pm

• வீரும் போரும்
விடைதரும் தமிழா
நீரும் சோறும் பெருவோம்
என
பாரும் திரண்டிட
வேரும் அசைந்தது

பார்த்தது பார்த்தன் கண்கள்
மெல்ல
கோர்த்தது வேர்த்ததும் கைகள்
அதிரும் காவல் அடிதடியாலே
அவலம் தொடர்ந்தழு குரல்கள்

• இனி
எழுபவன் உழுபவன்
எவனும் புவிதனில்
எதிரியோ? முழங்கிடு தமிழால்

• வித்தில்லா உயிரினமாய்
விதையில்லா விவசாயம்.
பிஞ்செல்லாம் நஞ்சாக்கும்
பெருமையில் என்தேசம்

• ஓடி உழைத்து
ஊர்முழுதும் பசி போக்க
தேடித்திரிகின்ற உழவன்

அவன்
பயிர்செய்து உயிர் செய்த
வயல்கள்

இன்று
கள்ளி முளைக்கும் காடாய்

மேலும்

பதிவுக்கு நன்றி சகோதரா 20-Sep-2017 3:04 am
பாவம் அவனது நிலை.., வானத்தை பார்த்தேன் பாலையாய் கண்டேன் உழவனுக்கு அஞ்சலி 19-Sep-2017 1:37 pm
பதிவுக்கு நன்றி சகோதரா... உழுபவன் ஓரணியானால் உருப்படும் விவசாயம். 18-Sep-2017 9:21 pm
கோவணம் ஒன்றை மட்டும் விட்டு விட்டார்கள் உன் மானம் காக்க தன்மானம் உன்னை விடவில்லை !! கலிகாலம் இது . களிக்கு கூட வழி இல்லாமல் போகும் ஒரு நாள் !! 18-Sep-2017 8:53 pm

பொங்கலோ பொங்கல் !

நெற்கதிரும், மாவிலையும்
நிலம் விளையும் ஆவாரை
செங்கழனிச் செங்கரும்பு
சிறுபீளைப் பூ சேர

மஞ்சளொடு பனங்கிழங்கு
மண்பானை, மாக்கோலம்
மருக்கொழுந்து, செவ்வரளி
சாமந்தி, சம்பங்கி

என
பூவாசம் மணமணக்கும்
புதுப்பொங்கல் தேனினிக்கும்

நமக்கென்ன?

பயிர்கொண்ட உழவனின்
உயிர்கொன்றோம்

பசிப்பிணி மருத்துவன்
பசி கண்டோம்

பயிர் விதைத்த விவசாயி
பதை பதைத்துப் பதை பதைத்து

உயிர் தொலைத்த துயர்மறந்து
ஊரெங்கும் உரக்கச் சொல்வோம்

பொங்கலோ பொங்கல் !

வித்தெல்லாம் முத்தாக்கி
விளைவித்தான் காய்கனிகள்

நெல்லும், சோளமும்
நிலமெல்லாம் வனப்பாக்க
சாமையும், வரகும்
சமைத்துண்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

முபாலு

முபாலு

பட்டுக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே